திங்கள், 28 செப்டம்பர், 2015

ஈண்டு வக்காணம் அல்லது ஆளத்தி என்பது ஆலாபனை என்று 
பொருள்படும். இன்றும் மலையாளத்தில் "யேசுதாஸ் இப்போது 
பாடுவார்" என்பதனை யேசுதாஸ் ஆலாபிக்குன்னு என்று 
கூறுவதை அன்பர்கள் அறிந்திருக்கக் கூடும்.
**
பாடும்போது, குரலை உயர்த்தியும், குரலை இறக்கியும்,
உயர்த்திய குரலைப் படிப்படியாக இறக்கித் தாழ்நிலைக்குக் 
கொண்டு வருதலும் பாடுவோர் புரியும் வினைகள். இவை 
எடுத்தல், படுத்தல், நலிதல் என்று தமிழிசையில் அழைக்கப்படும்.
இவ்வாறு எடுத்தும் படுத்தும் நலித்தும் பாடுதல் பாடுவோர் 
இயல்பாக மேற்கொள்ளும் செயல்களே.        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக