புதன், 9 செப்டம்பர், 2015

தோழர் பொழிலன் கைது!
கருத்து சுதந்திரப் பாதுகாப்புக் கனவான்களைக் காணவில்லை!
---------------------------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
-------------------------------------------------------------------------------------------------
சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள்
மாநாட்டைக் கண்டித்துச் சுவரொட்டி ஒட்டியமைக்காக
தோழர் பொழிலன் கைது செய்யப் பட்டுள்ளார்.
**
தோழர் பொழிலனுக்குச் சிறை புதிது அன்று. அவரின் தந்தையார்
பாவலரேறு பெருஞ்சித்திரனார் எல்லா ஆள்தூக்கிச்
சட்டங்களாலும் சிறைப்படுத்தப் பட்டவர். தந்தையைப் போலவே
தோழர் பொழிலனும் சிறை செல்ல அஞ்சியதே இல்லை.
சிறை செல்ல நேரிடுமே என்று அஞ்சித் தம் கருத்துக்களை
மறைத்துக் கொண்டதில்லை.
**
பாதுகாப்பாக இருந்து கொண்டு புரட்சி பேசும், குட்டி முதலாளித்துவ
ஈனத்தனத்தின் மீது காரி உமிழ்ந்தவர்கள் தந்தையும் மகனும்.
**
பல ஆண்டுகளுக்கு முன்பு, தோழர் பொழிலன் பிணையில்
விடுதலையாகி வந்திருந்த நேரம். (கொடைக்கானல் தொலைக்காட்சி
கோபுரத் தகர்ப்பு வழக்கில், பாமகவின் வடிவேல் ராவணன்
காட்டிக் கொடுத்தமையால், தோழர் பொழிலன் மீதான
120B சட்டப் பிரிவு (குற்றமுறு சதி) உறுதியானதால் தோழர்
தண்டனை பெற்றார்).
**
அவரின் இல்லத்துக்குச் சென்று இருந்தோம் நானும் தோழர்
திலீபனும்( K E பாஸ்கரன்). பிணை நிபந்தனையின்படி,
தோழர் பொழிலன் நாகர்கோவிலில் தங்கி இருக்க வேண்டும்.
தோழருக்கேற்ற தங்குமிடம் ஏற்பாடு செய்வது குறித்து
தோழரின் தாயார் தாமரை அம்மையாருடன் உரையாடிக்
கொண்டிருதோம். தோழர் பொழிலனை அப்போதுதான்
முதன் முதலாகச் சந்திக்கிறோம். அவரின் தந்தையாருடன்
நல்ல பழக்கம் உண்டு.
**
ஒரு தியாக வேங்கையாக, போற்றத்தக்கதும் பின்பற்றத்
 தக்கதுமான வாழ்க்கையை வாழ்ந்து வரும் தோழர்
பொழிலனுக்குத் துணை நிற்போம்.
**
மூச்சுக்கு முன்னூறு தடவை கருத்துரிமை பேசும்
போலிகளைக்  காணவில்லை. தோழர் பொழிலனுக்கு
ஆதரவாகக் குரல் கொடுப்பதன் மூலம், பாசிச ஜெயா
அரசை எதிர்க்க இந்தப் போலிகள் தயாராக இல்லை.
**
ஆபத்து இல்லாத வெற்று விஷயங்களில், அரசை
எதிர்க்க வேண்டிய தேவை இல்லாத விஷயங்களில்
புரட்சியின் எல்லைக்கே சென்று திரும்பும் இந்தப்
போலிகள், பொழிலன் என்றவுடனே காணாமல்
போய் விடுவார்கள் என்பது தெரிந்ததே. பின் நவீனத்துவ
ஆபாச எழுத்தாளர் பெருமாள் முருகன் விவகாரத்தில்,
INFINITY வரை சென்ற இந்தப் போலிகள், பொழிலன் என்றவுடன்
ஒன்பது துவாரங்களையும் பொத்திக் கொண்டு விடுவார்கள்
என்பதும் ஒரு முக்கால உண்மையே.
******************************************************************    






  
            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக