புதன், 28 செப்டம்பர், 2016

நாராயண குருவை வெறுமனே ஒரு இந்துத் துறவி என்று
பாஜக குறுக்குமேயானால், அதை விட மூடத்தனம்
வேறில்லை. அவர் மகத்தான சீர்திருத்தவாதி. மாபெரும்
சாதி எதிர்ப்புப் போராளி. புலனாயினும் கீழாக நடத்தப்பட்ட
ஈழவ சாதி மக்களுக்கு சமூக அந்தஸ்த்தைப் பெற்றுத்
தந்தவர் அவர். ஈழவர் மட்டுமின்றி பிற ஒடுக்கப்பட்ட
அனைத்து சாதி மக்களுக்கும் சமூக அந்தஸ்த்தைப் பெற்றுத்
தந்தவர். மலையாள நம்பூதிரிகளின் ஆதிக்க நுகத்தடியை
உடைத்து சுக்குநூறாக இருந்தவர். ஏழை எளிய மக்களின்
பிரதிநிதியாக இருந்தவர். அவர்களின் வாழ்வில் ஏற்றம்
காண நாளெல்லாம் உழைத்தவர்.
**
மேலும் தத்துவ நூல்களை ஆழ்ந்து கற்றவர். மிகச் சிறந்த தத்துவஞானியும் ஆவார். அவரின் மறைவுக்குப் பின்னரும்
அவரின் சீடர்கள் அவரது கருத்துக்களைத் தொடர்ந்து எடுத்துச் சென்றார்கள்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக