வியாழன், 24 ஜூலை, 2014

சிகண்டியின் அம்புகளும் 
கட்ஜுவின் கணைகளும்!
----------------------------------------   
கட்ஜு! மார்க்கண்டேய கட்ஜு!!
கணைகளை வீசுகிறார்! யார் மீது?
செத்துப்போன ஒருவர் மீது!

தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி அசோக்குமார் 
ஊழல் புகாரில் சிக்கியவர்.  ஊழல் கறை  படிந்த 
அவரை உயர்நீதிமன்ற நீதிபதி ஆக்குவதற்கு 
மத்திய காங்கிரஸ் அரசுக்கு  திமுக நிர்ப்பந்தம்
கொடுத்தது என்பதுதான் கட்ஜுவின் குற்றச்சாட்டு.

நல்லது கட்ஜு அவர்களே!திரு அசோக்குமார் 
ஆந்திர உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக 
நியமிக்கப் பட்டது பெப்ரவரி 2007இல்.
அவர் பணி  ஒய்வு பெற்றது  ஜூலை 2009இல்.
இறந்து போனது அக்டோபர் 2009இல்.
தாங்கள் புகார் கூறுவது ஜூலை 2014இல்.

செத்துப்போன ஒருவர் மீது, செத்து ஐந்து 
ஆண்டுகள் கழித்து இப்போது புகார் கூறும் 
தாங்கள் ஒரு நபும்சகன்! ஒரு பேடி!
ஒரு சிகண்டி!!!

தன்தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்லமுடியாமல் 
செத்துப்போன ஒருவர் மீது புகார் கூறுவது 
என்ன வகை நேர்மை?

மறைந்திருந்து வாலியைக் கொன்ற ராமன் 
காலம் முழுதும் பழி சுமந்து நிற்கிறான். 

     வெவ்விய புளிஞர் என்ன விலங்கியே
    மறைந்து வில்லால் எவ்வியது என்னை?

என்று வாலி கேட்பதாக கம்பன் எழுதுவான்.
ராமனிடம் பதில் இல்லை.ராமனைத் தெய்வமாக 
வணங்கும் கம்பனால் ராமன் வாலியை மறைந்து 
கொன்ற சிழிசெயலை நியாப் படுத்த முடியாது. 

 அதுபோல் 
கட்ஜு அவர்களே, தாங்கள்  செத்த பிறகும் 
இந்தப் பழி நீங்காது. . 

திரு அசோக்குமார் நேர்மையானவர் என்று 
வாதிடுவது நமது நோக்கம் இல்லை.உச்சந் 
தலையில் இருந்து உள்ளங்கால் வரை 
ஊழல் மலிந்து கிடக்கும் ஒரு நாட்டில் 
எந்த ஒரு நிறுவனமும் நேர்மையானதாக 
இருந்து விட முடியாது, நீதித் துறை உள்பட.

ஒடுக்கப்பட்ட தீண்டாமைக் கொடுமைக்கு 
உள்ளாக்கப் பட்ட ஒரு சமூகத்தில் இருந்து 
வந்த ஒருவரை உயர்நீதிமன்ற நீதிபதியாக 
உயர்த்துவது என்பது பகீரத் முயற்சி.
சமூகநீதியைச் செயலாக்குவது என்பதில் 
பிற காரணிகளைக் கருத்தில் கொள்ள 
முடியாது தகுதி, திறமை, நேர்மை என்பன 
எல்லாம் விரும்பத் தக்கவையே தவிர 
கட்டாயமானவை அல்ல.நீதிபதியாக 
உயர்த்தப் பட்டவர் அடிமட்ட சமூகத்தைச் 
சேர்ந்தவரா என்பது மட்டும்தான் தீர்மானிக்கிற 
அம்சம்.

சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பதைப் போல,
பாஜக ஆட்சிக்கு வந்த நேரம் பார்த்து 
கட்ஜு இவ்வாறு கணைகளை வீசுவது 
அவரின் உள்நோக்கத்தை வெளிப்படுத்தி 
விடுகிறது.வரும் பெப்ரவரி 2015இல் முடியப் போகும் 
 தமது பத்திரிக்கை கவுன்சில் தலைவர் பதவி 
நீட்டிக்கப் படாதா என்ற நப்பாசைதான் 
கட்ஜுவின் செயல்களுக்குக் காரணம்.

2002 குஜராத் படுகொலைகளில் நரேந்திர 
மோடிக்குப் பங்கு இருக்கிறது நரேந்திர மோடி 
ஒரு கொலைகாரன் என்று கூவினார் கட்ஜு.
இவ்வாறு எலும்புத் துண்டு வீசிய காங்கிரசுக்கு 
வாலாட்டினார் கட்ஜு.இப்போது ஆட்சி மாறி 
விட்டதனால் பாஜகவைப் பார்த்து வாலாட்டுகிறது 
கட்ஜு.

ஆனால் இவர் நினைப்பது போல,மோடி
அவ்வளவு சுலபத்தில் ஏமாறுகிறவர் அல்ல.
கட்ஜுவைப் பற்றிய தெளிவான கணிப்பு 
மோடிக்கு உண்டு.பாஜகவிலும் ஆர்.எஸ்.எஸ்சிலும் 
உள்ள பார்ப்பன அதிகார மையங்களைத் தகர்த்துத்தான் 
மோடி பிரதமர் ஆகி உள்ளார். தனக்கு நம்பகமான 
அமித் ஷாவை பாஜக தலைவராக்கி உள்ளார்.
இன்னும் சொல்லப் போனால், தந்தை பெரியார் 
நடத்திய பார்ப்பன எதிர்ப்புப் போராட்டத்தை 
பாஜகவில் நடத்திக் கொண்டு இருக்கிறார் மோடி.

எனவே கட்ஜுவுக்கு எலும்பு கிடைக்க வாய்ப்பு இல்லை.

***************************************************************    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக