வியாழன், 5 பிப்ரவரி, 2015

கிறிஸ்துவம் சாதிகளை ஏற்றுக் கொண்ட மதம்!
எனவேதான் அண்ணல் அம்பேத்கார் 
கிறிஸ்துவத்தை ஏற்கவில்லை!
தொல் திருமாவளவன் கருத்து!
-------------------------------------------------------------------------------- 
"புரட்சியாளர் அம்பேத்கார் 1956இல் பௌத்தத்தைத் 
தழுவினார்.அவர் பல்வேறு மதங்களை ஆய்வு செய்து,
வெவேறு மதங்களில் உள்ள நல்லது கெட்டதுகளை 
எல்லாம் கண்டறிந்து, கிறிஸ்துவத்தை ஏற்றுக் கொள்ளலாம் 
என்கிற முடிவுக்கு வந்த நிலையில், திடீர் என்று அவர் அந்தக் 
கருத்தை மாற்றிக் கொண்டார்.ஏனென்றால், மதுரை 
கிறிஸ்துவத் தேவாலயங்களில் இருக்கிற சாதிப் பாகுபாடுகள் 
தீண்டாமைக் கொடுமைகள் பற்றித் தமது ஆய்வில் கண்டு 
அறிந்தார். கிறிஸ்துவமும் சாதி கிறிஸ்துவமாக மாறி விட்டது.
சாதிகளை இது ஏற்றுக் கொண்டு இருக்கிறது. எனவே 
கிறிஸ்துவத்துக்கு மாறுவதில் எந்தப் பயனும் இல்லை 
என்று அவர் வேதனைப் பட்டார்.அதனால்தான் அவர் 
கிறிஸ்துவத்தை தேர்வு செய்யத் தயங்கினார்."
...........தொல் திருமாவளவன்........

ஆதாரம்:
----------------- 
திருமாவளவன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் 
"நமது தமிழ்மண்"ஏடு, சனவரி 2015, பக்கம்-32.

********************************************************************  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக