வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

கேஜ்ரிவாலின் ஆட்சி பார்ப்பன பனியா ஆட்சியே!
------------------------------------------------------------------------------ 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
------------------------------------------------------------------------------- 
உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அடையாள அரசியல் இந்தியாவில் மட்டுமே உள்ளது.சாதி மத அடையாளங்களின் அடிப்படையிலான அரசியல் இந்தியாவில் கொடி கட்டிப் பறக்கிறது. இந்தியாவில் துளிர்த்து 
வந்த இடதுசாரி அரசியலை அடையாள அரசியல் விழுங்கி விட்டது.

டில்லியில் கேஜ்ரிவால் அமைத்திருக்கும் ஆட்சி பார்ப்பன பனியா ஆட்சியே. டில்லி சட்டமன்றத்தின் மொத்தமுள்ள 70 எம்.எல்.ஏக்களில் 
67 பேர் ஆம் ஆத்மி கட்சியினர். இந்த 67 பேரின் சாதி ரீதியிலான 
புள்ளி விவரங்களைக் கீழே காண்க.

பார்ப்பனர்கள்: 22
பனியா:             8
பிற உயர்சாதி: 9
ஜாட் சீக்கியர்கள்: 8
பிற்பட்டோர்:    5
எஸ்.சி/எஸ்.டி: 11
முஸ்லிம்:       4
ஆக மொத்தம்: 67 

67 பேரில் 47 பேர் ( 22+8+9+8) உயர்சாதியினர்.
அந்த 47 பேரில் 30 பேர் பார்ப்பன பனியாக்கள்!
எனவே, அடையாள அரசியல் கோட்பாடுகளின்படி,
கேஜ்ரிவாலின் ஆட்சி பார்ப்பன பனியா ஆட்சியே!

*******************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக