வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒன்றாக இணையுமா?
-------------------------------------------------------------------------------------------- 
தோல்வி, படுதோல்வி, தொடர்ந்த தோல்வி இவற்றால் 
பாதிக்கப் பட்ட  CPI, CPM கட்சிகள் ஒன்றாக இணைய 
வேண்டும் என்று சில நல்ல உள்ளம் கொண்ட அப்பாவித் 
தொண்டர்கள் விரும்புகின்றனர்.
---------------------------------------------------------------------------------
1986 பாட்னா CPI மாநாட்டில் இரு கட்சிகளும் ஒன்றிணைய 
வேண்டும் என்று CPI பொதுச் செயலர் சி ராஜேஸ்வர் ராவ் 
வேண்டுகோள் விடுத்தார்.
அதே ஆண்டில் நடைபெற்ற AITUC மாநாட்டில் இதே 
வேண்டுகோள் ( MERGER) முன்வைக்கப் பட்டது.
--------------------------------------------------------------------------------------- 
ஆனால், மார்க்சிஸ்ட் கட்சி, இணைப்புக்கான இவ்விரு 
வேண்டுகோள்களையும் இகழ்ச்சியுடன் நிராகரித்தது.
பாயாசத்தில் சாக்கடைத் தண்ணீரைக் கலக்க முடியுமா 
என்று மார்க்சிஸ்ட்கள் கேட்டனர். CPI கட்சி அவமானத்துடன் 
வாயை மூடிக் கொண்டது.
--------------------------------------------------------------------------------------------------  
தற்போது, MERGER OF CPI and CPM என்கிற அஜண்டாவே
இரு கட்சிகளிடமும் கிடையாது. 
----------------------------------------------------------------------------------- 
திமுகவும் அதிமுகவும் இணையலாம்.
பாஜகவும் காங்கிரசும் இணையலாம்.
ஆர்.எஸ்.எஸ்.சம் இசுலாமிய அமைப்புகளும் இணையலாம்.
இவையெல்லாம் நடக்கலாம்.
------------------------------------------------------------------------------------------------- 
ஆனால், CPIயும் CPMமும் இணையாது.
காரணம் என்ன?
இரண்டு கட்சி என்றால், இரண்டு மாநாடு, இரண்டு வசூல்!
இரண்டு மாநிலச் செயலாளர் பதவி, இன்ன பிற.
ஆனால், ஒரே கட்சியாக இணைந்தால், 
ஒரு வசூல்தான். ஒருவருக்குத் தான் பதவி.
இதுதான் ஒரே காரணம்!
மெய்யான காரணம்!!
***************************************************88
  
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக