வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

கேரளத்தின் கொலைகார முதலமைச்சரால்
சித்திரவதை  செய்து கொல்லப்பட்ட
நக்சல்பாரிப் புரட்சியாளர்  ராஜன்!
நெருக்கடி நிலைக் காலக் கொடுமைகள்:
---------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------------
1)  சேலம் சிறையில் கம்யூனிஸ்ட்களைப் படுகொலை 
செய்த ராஜாஜியும்,1965  மொழிப்போரில் 
மாணவர்களைப் படுகொலை செய்த பக்தவத்சலமும் 
நம்மால் மறக்க முடியாதவர்கள்..

2) என்றாலும் ஹிடலரைப்போல் இவர்கள் சித்திரவதை
முகாமை உருவாக்கவில்லை.    

3) "ELIMINATE THEM"   என்பதுதான் இவர்களின் .
கோட்பாடு.

4) ஆனால், சித்திரவதைவாதிகளின் கோட்பாடு:
DON'T ELIMINATE THEM, TORTURE THEM என்பது.

5) கேரளத்தில் 1970 அக்டோபர் முதல், 1977  மார்ச்  
வரை முதலமைச்சராக   இருந்த  ஒருவரை 
"ரண ரசிகர்" என்று புரட்சியாளர்கள் அழைப்பார்கள். 
சித்திரவதைப் பிரியர் என்று பொருள்.

6) தோழர் ராஜனை நினைவு இருக்கிறதா? இந்திரா 
காந்தியின் கொடிய நெருக்கடி நிலையை 
(1975-1977) எதிர்த்துப் போராடிய பொறியியல் 
மாணவர்.

7) கோழிக்கோடு REC பொறியியல் கல்லூரியில் 
படித்த அவரை ரண ரசிகரின் காவல் மிருகங்கள் 
சித்திரவதை செய்து கொன்று பிணத்தையும்  
எரித்து விட்டன.

8) நெருக்கடி நிலை என்றால் என்ன என்று 
தெரியாதவர்களால் இந்தக் கட்டுரையைப் 
புரிந்து  முடியாது.

9) காக்கயம் சித்திரவதை முகாமில் ஜெயராம் 
படிக்கல் என்ற காவல் அதிகாரியும் அவன் 
ஏவல் நாய்களும் ரண ரசிகனின் உத்தரவுக்கு  
இணங்க இந்தக் கொடூரத்தைச் செய்தனர்.

10) யார் இந்த ரண ரசிகன்? யார் இந்தக் கயவன்?
அவன்தான் அச்சுத மேனன்! போலிக் கம்யூனிஸ்ட்
கட்சியான CPI கட்சித் தலைவன். (படத்தில் உள்ளவன்)

11) சஞ்சய் காந்தியின் எடுபிடியான கருணாகரனும்
( இவன் உள்துறை அமைச்சர்) , அச்சுத மேனனும்
தோழர் ராஜனின் படுகொலைக்குப் 
பொறுப்பானவர்கள்.
-
12) நெருக்கடி நிலை முடிந்து, அச்சுத மேனன்
பதவி விலகியதும், மக்களின் தீவிரமான எதிர்ப்பால்
அரசியலை விட்டே இவன் ஒதுங்கியதும் வரலாறு.

13) 1991இல் ஒரு நாயைப் போலச் செத்தான் 
கொடிய கொலைகார அச்சுத மேனன்.அதற்கு 
முன்பே மானமுள்ள மலையாளி மக்களின் எதிர்ப்பால், 
1978 முதல் அரசியலை விட்டு விலகி வீட்டுக்குள் 
முடங்கிக் கிடந்தான்.

14) இவன் செத்த செய்தி அறிந்து, நக்சல்பாரிப்
புரட்சியாளர்கள் இவனது சாவைத் தீபாவளியாகக்
கொண்டாடினார்கள்.

15) நானும், என்னுடன் பணியாற்றிய, மறைந்த
நக்சல்பாரிப் புரட்சியாளர் ரவீந்திரனும், 
அண்ணாசாலை புகாரி ஓட்டலில் மட்டன் 
பிரியாணி சாப்பிட்டு இவனுடைய சாவைக் 
கொண்டாடினோம்.

16) போலிக் கம்யூனிஸ்ட்களை அம்பலப் படுத்தி
முறியடிக்காமல் புரட்சி என்பது ஒரு அங்குலம் கூட
முன்னேறாது.

16) புரட்சி என்பது மாலை நேரத்து விருந்து அல்ல
என்பதை உணர்த்திய ராஜனுக்கு செவ்வணக்கம்.
***************************************************        
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக