வியாழன், 5 ஏப்ரல், 2018

அத்வைதம் நூல் குறித்து எழுந்துள்ள பல்வேறு
விமர்சனங்களுக்கு நூலாசிரியரின் பதில்! (பகுதி-1)
-------------------------------------------------------------------------------------
தத்துவக் கல்வியைப் பொறுத்தமட்டில் இன்றைய
காலத்தின் தேவை எளிய அறிமுக நூல்கள்.

அத்வைதம் என்றால் என்ன?
பின்நவீனத்துவம் என்றால் என்ன?
பொருள்முதல்வாதம் என்றால் என்ன?
ஆகிய தலைப்புகளில் எளிய அறிமுக நூல்கள்
இன்று தேவைப் படுகின்றன.

"A brief introduction" என்ற வகையில் ஆங்கில மரபிலும்,
ஏன் உலக மொழிகள் அனைத்திலும் இவ்வாறு எளிய
அறிமுக நூல்கள் எழுதப்படுவது நடப்பில் இருக்கிறது.

எளிய அறிமுக நூல்களின் ஒரு சாதக அம்சம்
என்னவெனில், அவை அதிகம் பேரை எளிதில்
சென்றடைய வல்லவை. எழுதப்பட்ட பொருளின்
மீது ஆர்வத்தைத் தூண்டி மேலும் கற்க உதவுபவை.
எழுதப்பட்ட பொருளின் அடிப்படையை உணர்த்துபவை.

இவற்றை மனதில் கொண்டே
மார்க்சியப் பார்வையில் அத்வைதம்: ஓர் எளிய அறிமுகம்
என்ற நூல் எழுதப்பட்டு உள்ளது. இது வெறுமனே
அத்வைதத்தை அறிமுகம் செய்யும் நூல் மட்டுமல்ல.
மாறாக அத்வைதத்தை மார்க்சிய நோக்கில்
திறனாய்வு செய்யும் நூல். இத்திசை வழியில்
தமிழில் முதன் முதலில் எழுதப்பட்ட நூலாக இது உள்ளது.

இந்நூல் அத்வைதத்தின் அடிப்படை அம்சங்கள்
என்னென்ன, அத்வைதத்தின் சாரம் என்ன, அத்வைதம்
கூறுகிற பிரம்மம் என்பது என்ன உள்ளிட்ட பல்வேறு
அம்சங்களை மிகத் தெளிவாக விளக்கி உள்ளது.

ஆதிசங்கரரின் வாதங்கள் தவறானவை என்பதை 
இந்நூல் நிரூபிக்கிறது.
அவரின் பிரம்மம் என்ற கருத்தாக்கத்தின் மீது
கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளது.

சுருங்கக் கூறின், தத்துவார்த்த நோக்கில் அத்வைதத்தை
இந்நூல் அறிவியல் வழியிலும் மார்க்சிய நோக்கிலும்
கறாராக .விமர்சித்துள்ளது.
-------------------------------------------------------------------------------------------
தொடரும்
------------------------------------------------------------------------------------------------------


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக