சனி, 7 ஏப்ரல், 2018

மதிப்பீடு வேறு! வரலாற்றைச் சொல்வது வேறு!
-----------------------------------------------------------------------------------
ஈஸ்வரன் அவர்களே,
நீங்கள் குறிப்பிட்டுள்ள எதுவும் விசிஷ்டாத்வைதம்
பற்றிய எனது மதிப்பீடு அல்ல. அது நடந்த வரலாற்றைச்
சொல்லும் reporting. அதில் எனது அபிப்பிராயத்திற்கு
இடமில்லை. விசிஷ்டாத்வைதம் பற்றிய மதிப்பீடு
அந்த நூலின் அஜெண்டாவிலேயே இல்லை. நிற்க.
உங்களது கருத்தை நீங்கள் சொல்லலாம். அதில்
எனக்கு  ஆட்சேபம் இல்லை.ஆனால் நீங்கள்
நூல் விமர்சனத்தை விட, தனிநபரை அவதூறு
செய்வது என்ற நோக்கத்துடனே எழுதி
வருகிறீர்கள். இது உங்களின் கீழ்த்தரமான குணம்.
நான் உங்கள்  பாணியிலேயே பதில் கொடுக்க
முயன்றால், நீங்கள்  போய்விடுவீர்கள்.
நீங்கள் என்ன பெரிய குவான்டம் தியரியைச்
சொல்லி விட்டீர்கள். எனக்குப் புரியாமல் போக.
வார்த்தையை அளந்து பேசுவது உங்களுக்கு நல்லது.

காழ்ப்புணர்ச்சி என்னும் தொழுநோயால் பீடிக்கப்
பட்டுள்ள குஷ்டரோகி ஈஸ்வரனே, மீண்டும் மீண்டும்
நூலை விமர்சனம் செய்வதற்குப் பதில் தனிநபரை
அவதூறு செய்வது, தனிநபர் தாக்குதலில்
இறங்குவது என்றே செயல்படுகிறீர்கள்!
உங்களால் அதுதான் முடியும். பாவம், நீங்கள்
மார்க்சிய நடைமுறை எதுவும் இல்லாத வெறும்
குட்டி முதலாளித்துவ ஆசாமி! பாட்டாளி வர்க்கக்
கண்ணோட்டம் என்ன என்பது பற்றி உங்களுக்கு
உணர்த்துகிறேன்.

ஈஸ்வரன் அவர்களே,
தற்போது, துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கை
விசாரணை ஒன்றில் பாதிக்கப்பட்ட தோழருக்காக
வாதுரைத் தொகுப்பு (defence brief) ஒன்றை முடிக்க
வேண்டும். அந்த வேளையில் மூழ்கி இருக்கிறேன்.
எனவே உங்களின் எல்லா உளறல்களுக்கும்
சேர்த்து நாளை பதிலளிக்கிறேன். அதுவரை
பொறுத்திருக்கவும்.

எதிர்வாதக்காரரை எரிச்சல் மூட்டாமல், தனிநபர்
தாக்குதலில் இறங்காமல், அவமதிக்கும் வார்த்தைப்
பிரயோகம் இல்லாமல் உங்களால் ஒரு கருத்தையும்
சொல்ல முடியாது. ஏனெனில் நீங்கள் ஒரு குட்டி
முதலாளித்துவ ஆசாமி. எனவே உங்களிடம்
எனக்கு கோபம் இல்லை; பரிதாபமே ஏற்படுகிறது.
நாளை பார்ப்போம்.

siththaarththa sangar re


      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக