ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

விஷ்ணுபுரம் நாவலைப் பற்றிய ரவியின் ஐந்தாவது கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்கையில், கதை ஐந்தாம் நூற்றாண்டில் நடக்கிறதென்றும், அதனால் அத்வைதம், விசிஷ்டாத்வைதம் மற்றும் த்வைதம் பற்றி அதில் குறிப்பு இல்லை என்று கூறியுள்ளீர்கள். ஆனால் ஒரு கட்டத்தில் பட்டர் (??) அவையில் “தத்வம், ஹிதம், புருஷார்த்தம்” பற்றி பேசுவதாக வருகிறது. எனக்குத் தெரிந்து இம்மூன்றைப் பற்றி வைஷ்ணவ சம்பிரதாயத்தில் மட்டுமே அதிகம் பேசப்படுகிறது. அதுவும் நாதமுனிகள் காலத்திற்கு பின் தான் தொடங்கி இருக்க வேண்டும். ஆழ்வார்கள் அவற்றைப் பற்றி பேசி இருந்தாலும் அதை நாம் உரைகளின் மூலமே உணர முடிகிறது. அப்படி இருக்க ஐந்தாம் நூற்றாண்டில் எப்படி பட்டர் இதுபற்றி பேசி இருக்க முடியும்? என்னுடைய புரிதலில் ஏதேனும் பிழை இருந்தால் தயவு செய்து சுட்டிக் கட்டவும்.
– சீனு
==================== 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக