திங்கள், 2 ஏப்ரல், 2018

ஏன் கற்க வேண்டும்?
ஏன் அறிவைப் பெற வேண்டும்?
மார்க்சியம் கூறும் விடை!
--------------------------------------------------------
கற்றல் இனிமையானது. சுகானுபவம் தருவது.
எனினும் கற்றலின் நோக்கம் இன்பத்தைப்
பெறுவது மட்டுமல்ல.

அறிதலின் நோக்கம் சமூக மாற்றத்தை நோக்கி
நடை போடுவதற்கே என்று மார்க்ஸ் கருதினார்.
கல்வியறிவானது ஒருவனின் சுயநலனுக்குப்
பயன்படுவது மட்டுமே என்று கருதுவது
தனியுடைமை வர்க்கச் சிந்தனை. மார்க்ஸ் இதை
ஏற்கவில்லை.

ஒருவன் பெற்ற கல்வியறிவானது சமூகத்திற்குப்
பயன்பட வேண்டும், சமூக மாற்றத்துக்காகப் பயன்பட 
வேண்டும் என்று மார்க்ஸ் கருதினார்.

மார்க்சிஸ்டுகள் மேலும் மேலும் கற்க வேண்டும்.
அவர்கள் பெறும் கல்வியறிவு சமூக மாற்றத்துக்காகப்
பயன்பட வேண்டும்.

இதுதான் அறிவைப் பெறுதல் குறித்த மார்க்சிய
நிலைப்பாடு!
**********************************************************   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக