வியாழன், 9 பிப்ரவரி, 2017

நம்பிக்கை வாக்கெடுப்பை
ஆளுநர் கண்டிப்பாக வலியுறுத்த வேண்டும்!
---------------------------------------------------------------------------------
1) அதிமுக சட்டமன்றக் குழுவில் வெளிப்படையான
பிளவு ஏற்பட்டுள்ளது. மேலும் அதிமுக கட்சியிலும்
இதன் எதிரொலி எழுந்துள்ளது. (பொருளாளர் ஓபிஎஸ்
நீக்கம், அவைத்தலைவர் மதுசூதனன் ஓபிஎஸ் அணிக்கு
ஆதரவு). எனவே சட்டமன்றத்தில் அதிமுகவுக்கு 2016 மே
மாதம் இருந்த, ஜெயா முதல்வரானபோது இருந்த,
பெரும்பான்மை தற்போது இல்லை. அல்லது
பெரும்பான்மை இருப்பதாகக் கோருதல் வலுவாக
சிக்கலுக்கு உட்படுத்தப் பட்டுள்ளது (seriously disputed).

2) எனவே ஆட்சி அமைக்க பன்னீரை அழைத்தாலும்,
அல்லது சசிகலாவை அழைத்தாலும், அல்லது
இருவரையும் ஒருவர்பின் ஒருவராக அழைத்தாலும்,
அவ்வாறு அழைக்கப் பட்டவர்கள் சட்ட மன்றத்தில்
தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்குமாறும்
அதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பை
மேற்கொள்ளுமாறும் ஆளுநர் கண்டிப்பாக
வலியுறுத்த வேண்டும்.
************************************************************************       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக