வியாழன், 2 பிப்ரவரி, 2017

அன்றே சொன்னேன்!
மாறன் விடுதலை ஆவார் என்று!
-------------------------------------------------------------
ஏர்செல் மாக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள்
விடுதலை செய்யப் படுவார்கள் என்றும் அந்த
வழக்கு நிற்காது என்றும் ஆதாரத்துடன், இரண்டு
ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய கட்டுரையைப்
படித்த வாசகர்களுக்கு இன்றைய தீர்ப்பு
வியப்பு அளிக்காது!

மேலும் ஒரு வழக்கு மாறன் மீது உள்ளது. அமைச்சர்
என்ற முறையில் தமக்கு வழங்கப்பட்ட ISDN
இணைப்புகளை தேனாம்பேட்டையில் உள்ள
சன் டி.வி நிறுவனத்திற்குப் பயன்படுத்தினார்
என்ற வழக்கும் உள்ளது.

ஆடிட்டர் குருமூர்த்தியின் வலியுறுத்தலால்
தொடரப்பட்ட வழக்கு இது. இந்த வழக்கில்
BSNL அதிகாரிகளான திரு பிரம்மதத்தன் ITS,
திரு வேலுச்சாமி ITS ஆகிய அன்றைய சென்னைத்
தொலைபேசியின் தலைமை அதிகாரிகள்
(CGM-Chief General Manager) மீதும் வழக்குத் தொடரப்
பட்டுள்ளது. இந்த வழக்கு நிற்கவே நிற்காது.
நீதிமன்றத்தில் படுகேவலமாகத் தோற்கும் என்று
ஏற்கனவே எழுதி உள்ளேன். அந்தக் கட்டுரைகளைத்
தேடி வருகிறேன்.

வாசக அன்பர்களே, இக்கட்டுரைகளைப் படித்தது
நினைவு இருக்கிறதா?
****************************************************************      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக