வியாழன், 2 பிப்ரவரி, 2017

குட்டி முதலாளித்துவ மருத்துவர் புகழேந்தியின்
தடுப்பூசி எதிர்ப்புக் கயமை!
மூர்க்கத்துடன் முறியடிக்கப் பட வேண்டும்!
--------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------
குட்டி முதலாளித்துவம் புகழை விரும்பும்; கவன
ஈர்ப்பை விரும்பும். சமூகத்தில் எவரேனும் தன்னைக்
கொண்டாடிக் கொண்டே இருக்க வேண்டும் என்று
விரும்பும். அதற்காக மூடத்தனத்தை
நேர்மையின்மையை ஆரத் தழுவிக் கொள்ளும்.

சில மாதங்களுக்கு முன்பு, ஒரு வீடியோவை வெளியிட்டார்
மருத்துவர் புழேந்தி. ராஜீவகாந்தி கொலை பற்றிய
ஆவணப்பட வீடியோ அது. அதில், செத்துப்போன
புகைப்படக்காரர் ஹரிபாபு உயிருடன் இருப்பதாகவும்
அவர் வெளிமாநிலத்தில் ஒரு சாமியாராக வாழ்ந்து
வருவதாகவும் கூறினார். போகிற போக்கில் கூறி
விட்டுச் சென்றாரே தவிர, தாம் சொன்னதற்கு
எவ்விதத்திலும் ஒரு சான்றைத் தரவில்லை.

இதுதான் குட்டி முதலாளித்துவம்! இப்படிச் சொல்வதால்
தனக்கு எவ்வளவு புகழ் கிடைக்கும் என்று கணக்குப்
போடுமே தவிர, தான் சொன்னதற்கு ஆதாரம் தர
வேண்டும் என்று நினைக்காது.

ஹரிபாபு விவகாரம் முடிந்து விட்டது. இனி அடுத்ததாக
அதிர்ச்சி மதிப்பு (shock value) உடைய வேறு எதையாவது
சொல்ல வேண்டும் என்று யோசித்துக் கொண்டு
இருந்த புகழேந்திக்கு, தடுப்பூசி எதிர்ப்பு
கைகொடுத்து இருக்கிறது. எனவே தடுப்பூசி
எதிர்ப்புப் பிரச்சாரத்தில் இறங்கி விட்டார்.

இம்மாதம் (பிப்ரவரி) முழுவதும் தமிழகக் குழந்தைகளுக்கு
அரசே இலவசமாக  MR தடுப்பூசி போடப்போகிறது.
இதைச் சீர்குலைக்கும் நோக்கில், புகழேந்தியின்
நச்சுப் பிரச்சாரம் அமைகிறது.

தடுப்பூசியால் தீங்கு எதுவம் இல்லை. எனவே
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தயக்கமின்றி
தடுப்பூசி போடலாம். புழேந்தி போன்ற அந்நியக்
கைக்கூலிகளின் பொய்ப்பிரச்சாரத்தை நம்ப வேண்டாம்.
*******************************************************************
பின்குறிப்பு: மருத்துவர் புகழேந்தியின் கூற்றுகளுக்கு,
மருத்துவம் பயின்று தொழில் செய்யம் மருத்துவர்கள்
மறுப்பு அளித்து உள்ளனர். வாசகர்கள் அவற்றைத்
தேடிப் படிக்குமாறு வேண்டுகிறோம்.
-----------------------------------------------------------------------------------------------------
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக