செவ்வாய், 11 ஏப்ரல், 2017

ஓங்கல் இடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலி நீர் ஞாலத் திருளகற்றும் ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னேர் இலாத #தமிழ்

குற்றம் என்பதன் வரையறை என்ன? எதுவெல்லாம்
குற்றம்? இந்தியாவிலோ அல்லது அமெரிக்கா,
ஐரோப்பிய நாடுகளிலோ குற்றம் என்பதன்
வரையறை வேறு. சவூதி அரேபியாவில்
குற்றம் என்பதன் வரையறை வேறு. நாத்திகமோ,
கடவுள் மறுப்புப் பிரச்சாரமோ  பல நாடுகளில்
குற்றமாக இல்லாதபோது, சவூதி அரேபியாவில்
குற்றமாகக் கருதப்படுவதும் மரண தண்டனை
வழங்கப் படுவதும் அனைவரும் அறிந்ததே.
அறிவியல் வளர வளர நாத்திகம் வளரும்.
அதாவது "குற்றங்கள்" பெருகும்.
சவூதி அரேபியாவும் மரண தண்டனைகள் வழங்கிக்
கொண்டிருக்கும். இதைக் கணக்கில் கொள்ளாமல்
பதிவு எழுதப்பட்டு உள்ளது.   

பின்நவீனத்துவச் செல்வாக்கு அல்லது சாயல்
இந்தப் பதிலில் மெலிதாகத் தெரிகிறது. நல்லது. நன்றி.
நேர்படப் பேசுவதும் வெடிப்புறப் பேசுவதுமே
இந்தியா போன்ற கல்வித்தரத்தில் பின்தங்கிய
நாடுகளில் பயன்தரும் என்பது பலரின் பட்டறிவு. 
வாசகனை உய்த்து உணர வைக்கும் பதிவுகள்
வாசகர்களின் மூளைக்குள் சென்று சேர்வதில்லை.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக