ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

அண்ணாவின் கம்பரசத்தை நான் பியூசி படிக்கும்போது
கல்லூரி நூலகத்தில் படித்தேன். இங்கு இப்பக்கத்தில்
காட்டப்பட்ட கம்ப ராமாயணச் செய்யுளை வாசித்துப்
புரிந்து கொள்ள "கொண்டு கூட்டு" அவசியம். சந்தி
பிரித்துக் கொள்வதும் அவசியம்.
**
இயல்புறு செலவின் நாவாய் = இயல்பான வேகத்துடன்
செல்கின்ற கப்பல்

இருகையும் எயினர் தூண்ட = இருபுறமும் துடுப்பாளர்கள்
துடுப்பசைக்க

இவ்வாறு சந்தி பிரித்துப் படிக்கவும்.
**
பின்னாளில் "குயிலுக் குப்பம்" என்று தொடங்கும்
ஒரு திரைப்பாடலில்,
"இங்கு ஆயிரம் கம்பரசம்
இனி ஆரம்பம் ஆவதென்ன?"
என்ற வரிகள் மூலமாக அண்ணாவின் கம்பரசம்
ஒரு காவிய அந்தஸ்த்தைப் பெற்று விட்டது.
        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக