புதன், 14 ஜனவரி, 2015

பெருமாள் முருகனும் கண்ணனும் சமமான குற்றவாளிகளே!
-----------------------------------------------------------------------------------------------

காலச்சுவடு என்று நான் குறிப்பிடுவது காலச்சுவடு என்னும்
மாத இதழை அல்ல. காலச்சுவடு என்னும் மாபெரும்
கார்ப்பொரேட் மற்றும் பார்ப்பனீய நிறுவனத்தையே ஆகும்.
தற்காலத் தமிழ்ப் படைப்பிலக்கிய உலகை ஏகபோகம்
( MONOPOLY) செய்து கொண்டு இருக்கும்,  பிரும்மாண்டமான
பதிப்பு உலக சாம்ராஜ்யத்தையும் அதன் அதிபர் கண்ணன்
அவர்களையுமே குறிப்பிடுகிறேன்.

கொங்கு மண்டலத்தில் போராட்டம் நடத்தும் சங்கப்
பரிவாரங்கள் காலச்சுவடு அதிபர் கண்ணனை எதிர்த்து
சுண்டு விரலைக்கூட நீட்டவில்லையே ஏன்?

இந்த ஒட்டுமொத்தப் பிரச்சினையின்  மெய்யான
மையமாக இருக்கும் அதிபர் கண்ணனை பிச்சரிலேயே
(PICTURE ) யாரும் கொண்டு வரவில்லையே ஏன்?

போலிக் கம்யூனிஸ்ட் கட்சியான CPM கட்சியின்
எழுத்தாளர் அமைப்பான தமுஎகசவின் விரல்கள்
அதிபர் கண்ணனை நோக்கி நீளவில்லையே ஏன்?

காலச்சுவடு இல்லாமல் பெருமாள் முருகன் இல்லை என்பதும்,
ஏவியது காலச்சுவடுதான் ; பெருமாள் முருகன்
வெறும் அம்பு மட்டுமே  என்பதும், CPM கட்சியின் தமுஎகசவுக்கு
நன்கு தெரியும்.

பெருமாள் முருகன் குற்றவாளி என்றால், அதிபர் கண்ணனும்
அவருக்குச் சமமான குற்றவாளியே என்பதை நன்கு
தெரிந்து வைத்திருக்கும் சங்கப் பரிவாரங்களும், CPM கட்சியும்
காலச்சுவடு கண்ணனை அம்பலப் படுத்தாமல், பொத்திப் பொத்திப்
பாதுகாக்கும் மர்மம் என்ன?

இந்தக் கேள்விகளுக்கு விடை காண முற்படுங்கள் தோழரே!
உண்மை விளங்கும்!
........வீரை பி இளஞ்சேட்சென்னி.....

****************************************************************8888888
 
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக