வியாழன், 29 ஜனவரி, 2015

ஏபெல் பரிசு பெற்ற தமிழர்!
---------------------------------------------- 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------- 
நோபெல் பரிசு பற்றி எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் அந்த அளவு பிரபலம் ஆகாதது ஏபெல் பரிசு.
(ABEL PRIZE). இப்பரிசு 2002ஆம் ஆண்டு நிறுவப்பட்டு 
2003 முதல் வழங்கப் பட்டு வருகிறது. 

கணிதத்திற்கு நோபெல் பரிசு வழங்கப் படுவதில்லை.
கணிதம் என்பது எல்லா அறிவியல் துறைகளிலும் 
ஊடு கலந்து நிற்கிறது என்பதால் தனியாகக் கணிதத்திற்கு 
வழங்கத் தேவையில்லை என்று நோபெல் கருதினார்.

கணிதத்திற்குப் பரிசு இல்லை என்பது ஒரு குறையாகவே 
நீடித்தது. இக்குறையைப் போக்க வந்ததே ஏபெல் பரிசு.
நார்வே நாட்டின் அறிவியல் கழகம் (ACADEMY OF SCIENCES 
AND LETTERS) என்ற அமைப்பு இப்பரிசை வழங்குகிறது.

நியல் ஹென்றிக் ஏபெல் (NIEL HENRICK ABEL)
------------------------------------------------------------------------- 
இப்பரிசு நார்வே நாட்டின் கணித அறிஞர் நியல் ஹென்றிக் 
ஏபெல் அவர்களின் பெயரால் வழங்கப் படுகிறது. 1802ஆம் 
ஆண்டில் பிறந்த இக்கணித மேதை 26 ஆண்டுகளே வாழ்ந்து 
மிக்க இளம் வயதில் மறைந்தவர். கணிதத்தில் இவரின் 
பங்களிப்புகள் அருமை. அவற்றை விவரிக்க இங்கு இடமில்லை.

DISCRETE MATHS படிக்கும் மாணவர்கள் அபிலியன் குலம்
( ABELIAN GROUP) பற்றிப் படிப்பார்கள். ABELIAN GROUP என்பது 
ஒரு COMMUTATIVE GROUP ஆகும்.உதாரணமாக, இயல் எண்களில்,
3+5=5+3 ஆகும். THIS IS COMMUTATIVE w.r.t ADDITION. இத்தகைய 
COMMUTATIVE GROUPS அபிலியன் குலங்கள் என்று அழைக்கப் 
படும். கணித அறிஞர் ஏபெல் அவர்களின் நினைவாகவே,
அவரது பெயரால் ABELIAN GROUP என்று பெயர் சூட்டப் 
பட்டுள்ளது. அபெல் அவர்களின் மகத்தான பங்களிப்புக்கு ஒரு 
சான்றே இது.
ஏபெல் பரிசு பெற்ற தமிழர் 
--------------------------------------------- 
2003 முதல் வழங்கப்பட்டு வரும் ஏபெல் பரிசை, 2007இல் 
பெற்றவர் திரு சீனிவாச வரதன். தற்போது அமெரிக்காவில் 
வாழ்ந்து வரும் இவர், சென்னை மாநிலக் கல்லூரியில் 
பயின்றவர். கொல்கத்தா புள்ளியியல் பயிலகத்தில்
டாக்டரேட் (Ph.D) பட்டம் பெற்றவர். PROBABILITY THEORYயில் 
இவரின் பங்களிப்புக்காக ஏபெல் பரிசு வழங்கப் பட்டது.

வானொலியில் உரை!
------------------------------------ 
ஏபெல் பரிசு குறித்து, தமிழ் வாசகர்களுக்கு, முதலில் 
அறிமுகப் படுத்தியது நியூட்டன் அறிவியல் மன்றமே.
2012, 2013 ஆண்டுகளில் சென்னை வானொலியில் 
நியூட்டன் அறிவியல் மன்றத்தின் தலைவர் உரையாற்றி 
உள்ளார். சீனிவாச வரதன் குறித்தும் அவ்வுரை குறிப்பிடும்.

ஆங்கில ஏடு THE HINDU சீனிவாச வரதனின் பேட்டியை 
இன்று வெளியிட்டு உள்ளது. (பார்க்க: 29.01.2015, பக்கம்: 17)
----முந்தைய பதிவு ஜனவரி 29, 2015.-----------
****************************************************************      
        
          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக