திங்கள், 19 ஜனவரி, 2015

கண்ணாடி மாளிகையில் இருந்து கொண்டு 
கல் வீசும் தா.பாண்டியனின் விசுவாசிகள்!
----------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
---------------------------------------------------------------------- 
1) பல கோடி ரூபாய் நில  அபகரிப்புப் புகாரில் 
சிக்கி உள்ளார் தா பாண்டியன். நீதிமன்றத்தில் 
வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது.

2) தா.பா மீது வழக்குத் தொடுத்தவர் RSS காரரோ,
BJP காரரோ அல்ல. தா.பா.வின் சொந்தக் கட்சித் தோழர்.  
CPI கட்சிப் பொறுப்பாளர்.

3)  இந்தச் செய்தி எல்லா  ஏடுகளிலும் வெளிவந்துள்ளது.
தொடர்ந்து வந்து கொண்டும் இருக்கிறது. இதனால் 
கட்சியின் மானம் சந்தி சிரிக்கிறது.

4) தா.பா.வின் செய்கை நியாயமா என்று நாம் கேள்வி 
எழுப்பினால், நம் மீது பாய்கிறார்கள் தா.பா. விசுவாசிகள்.

5) தா.பா நில  அபகரிப்பு மோசடி செய்யவில்லை என்று 
அவர்கள் கூற முன்வரவில்லை. மாறாக, கட்சியில் 
உறுப்பினராக இல்லாதவர்கள் அதைக் கேள்வி 
கேட்கக் கூடாது என்கிறார்கள். 

6)  புருஷன் பெண்டாட்டி ரெண்டு பேரும் முத்தமிட்டுக்
கொள்ளலாம்; அடித்தும் கொள்ளலாம். நாலு சுவருக்குள் 
இருக்கும் வரை, அது அவர்களின் அந்தரங்கம். ஆனால்,
சண்டை ரோட்டுக்கு வந்து விட்டால், ஊர்க்காரன் தலையிடத்தான் 
செய்வான்.

7) தா.பா அபகரித்த சொத்து AITUC தொழிலாளர்களின் சொத்து.
தொழிலாளியின் வியர்வையில் விளைந்த சொத்து. அதை 
எவன் அபகரித்தாலும், அவன் எப்பேர்ப்பட்ட கொம்பனாக 
இருந்தாலும், தொழிலாளி சட்டையைப் பிடித்துக் கேட்கத் 
தான் செய்வான்.

8) "கோடிக்கால் பூதமடா--தொழிலாளி 
     கோபத்தின் ரூபமடா"
என்பதை தொழிலாளி நிரூபிக்கத்தான் செய்வான்.

9) AITUC யில் எல்லாக் கட்சிகளையும் சார்ந்த 
தொழிலாளர்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
எனவே, எல்லாக் கட்சிகளையும் சார்ந்த தொழிலாளர்களுக்கும் 
கேள்வி கேட்க உரிமை உண்டு.

10) தா.பா  நிலஅபகரிப்பே செய்யவில்லை என்றால், 
பொய் வழக்குத் தொடுத்த கட்சித் தோழரின் மீது
நடவடிக்கை எடுத்துக் கட்சியை விட்டு நீக்கலாமே!
ஏன் இன்னும் நீக்கவில்லை?

11) 1972இல் கம்யூனிஸ்ட் கட்சி, பண்ணையார்களிடம் 
இருந்து ஏழை விவசாயிகளின் நிலங்களை மீட்பதற்காக, 
நிலமீட்சிப் போராட்டம் நடத்தியது. திருநெல்வேலியில்,
சி.பா.ஆதித்தனாரின், தாதன்குளம் பண்ணையில் 
இறங்கி, கம்யூனிஸ்ட்டுகள் செங்கொடியை நாட்டினார்கள்.
கைதானார்கள், சிறை சென்றார்கள்.

12) ஆனால், இன்றோ, கட்சித் தலைவரிடம் இருந்து,
தொழிலாளர்களின் நிலத்தை மீட்க, கம்யூனிஸ்ட் 
தொண்டர்கள் போராடிக் கொண்டு இருக்கிறார்கள்!
என்னே  சரிவு! என்னே வீழ்ச்சி!!

13) இன்று பழைய செய்தித்தாள்களை எல்லாம் 
எடுத்துத் தேடியதில், தா.பாவின்  நிலஅபகரிப்பு குறித்து
பதினேழு செய்தித் துண்டுகள் (PAPER CUTTINGS) கிடைத்து 
இருக்கின்றன. தேவையான ஆதாரங்கள் அதில் 
இருக்கின்றன.

14) செங்கொடியும் அரிவாள் சுத்தியல் சின்னமும் 
உலகக் கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்துக்கும் பொதுவானவை.
அது தா.பா.வுக்கும்  அவருடைய விசுவாசிகளுக்கும் 
தனிஉடைமை அல்ல. எனவே, செங்கொடி இயக்கத்தைச் 
சேர்ந்த யார் எவருக்கும், கம்யூனிசத்தின் பெயரைக் கெடுக்கும் 
தா.பாவைக் கேள்வி கேட்க உரிமை உண்டு.

15) சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக 
இருக்க வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும்தான்.

16) இந்திரஜித் குப்தாவும் சதுரானத் மிஸ்ராவும் மத்திய 
அமைச்சர்களாக இருந்தார்கள். எவனாவது நாக்கில் 
பல்லைப் போட்டுப் பேச முடிந்ததா?

17) அப்படி ஏன் தா.பா.வால்  இருக்க முடியவில்லை? 

18) இந்தியாவில் எந்தக் கம்யூனிஸ்ட் தலைவரும் 
ஊழல் பெருச்சாளி என்று பேர் எடுத்தது இல்லை,
தா.பா.வைத் தவிர.

19) தா.பா.வுக்கு நாணம் இல்லாமல் இருக்கலாம்;
ஆனால், நான் நாணுகிறேன்.
     பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின்
     அறம்நாணத் தக்கது உடைத்து.

*************************************************************           
     



  
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக