ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

ஒருவரை மதிப்பிடுவது எப்படி?
மார்க்சிய அளவுகோல் எப்படி அளக்கிறது?
------------------------------------------------------------
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நம்மை அடிமைப் 
படுத்தி 200 ஆண்டுகள் ஆண்டது. இந்த 
நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்துக் 
கொண்டு தன்னுடைய நாட்டில் கொண்டு சேர்த்தது.

ஏகாதிபத்தியம் நம்மை அடிமைப் படுத்தி இருந்த 
காலத்தில் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதுதான் 
ஆகச்சிறந்த, ஆக உயர்ந்த செயல்பாடு.

எனவே ஒருவரை மதிப்பிடுகையில், அவர் 
ஏகாதிபத்திய எதிர்ப்புப்  போராளியா இல்லையா 
என்று பார்க்க வேண்டும். அதுதான் தலையாயது.

அப்படிப் பார்த்தால், ஈ வெ ராமசாமி யார்?
அவர் ஏகாதிபத்திய எதிர்ப்பாளரா? அல்லது 
ஏகாதிபத்திய அடிவருடியா?

இதுதான் அவரைத் தீர்மானிக்கும் அம்சம்!
உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை 
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடிவருடியாக 
இருந்த ஒருவர் மார்க்சிய அளவுகோலின்படி
மக்களின் நாயகர் ஆகமாட்டார்! அவர் மக்களின் 
எதிரி! அவ்வளவுதான்!
***********************************************   
        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக