செவ்வாய், 5 செப்டம்பர், 2023

 சாயிபாபாவை வணங்கும் சனாதனி!
போலியான சனாதன எதிர்ப்பு!  
----------------------------------------------------------
புட்டபர்த்தி சாயிபாபா மண்டையைப் போட்டு விட்டார்.
சாயிபாபாவை சனாதன சாரதி என்றே அவரின் 
பக்தர்கள் குறிப்பிடுவார்கள். ஆம், சாயிபாபா 
சனாதன தர்மத்தை ஏற்றுக் கொண்டவர். அதைப் 
பின்பற்றுபவர். .

மு க ஸ்டாலின் அவர்கள் துணை முதல்வராக 
இருந்தபோது புட்டபர்த்தி சென்னார். சாயிபாபாவைச் 
சந்தித்து வணங்கி ஆசி பெற்றார்.

சனாதன சாரதி சாயிபாபாவை வணங்கியவர்,
அதுவும் புட்டபர்த்திக்கே சென்று வணங்கியவர் 
அன்றைய தமிழ்நாட்டின் துணை முதல்வர் 
மு க ஸ்டாலின் அவர்கள்.

எனவே ஸ்டாலின் அவர்களும் உதயநிதி அவர்களும் 
சனாதனத்தை ஒழிக்கிறார்கள் என்று 
நம்புவது பேதைமையுள் எல்லாம் பேதைமை!  
-------------------------------------------------------------------
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக