வெள்ளி, 15 செப்டம்பர், 2023

 பொருள்முதல்வாத ஞானம் இல்லாதவன் 
மார்க்சியவாதி அல்ல!
-------------------------------------------------------------
இன்று என்னுடைய முந்நூல் பதிவு ஒன்றில் ஒரு கேள்வி 
கேட்டிருந்தேன். "B B ROY Great Briton Very Good Wife"  
என்று 12ஆம் வகுப்பு இயற்பியல் மாணவர்கள் ஏன் 
சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதே அந்தக் 
கேள்வி.

அநேகமாக பதிவைப் படித்த அத்தனை பேரும்
சரியான விடையை எழுதி விட்டார்கள், போலி 
நக்சல்பாரித் தற்குறிகளைத் தவிர. அது மின்தடையின் 
colour codeஐ நினைவுபடுத்தும் வாக்கியம்  அது ஒரு 
நிமோனிக் ஆகும். நிற்க.

1968 வரை தமிழ்நாட்டில் SSLC (11ஆம் வகுப்பு) 
வரையிலான பள்ளிக் கல்வியில் கணிதப் பாடம் 
இரண்டு விதமாகக் கற்றுத் தரப்பட்டது.
General Maths, Composite maths என்று இரண்டு பிரிவாக 
கணிதப் பாடம் இருந்தது. சுமார் 75 சதவீத மாணவர்கள் 
General Maths எடுப்பார்கள். அதில் அல்ஜீப்ரா, ஜியோமெட்ரி 
எதுவும் கிடையாது. வெறும் தனிவட்டி, கூட்டு வட்டி,
லாப நஷ்டம், சதவீதம் மட்டும்தான். அறிவியலில் 
இருந்து துண்டித்துக் கொண்ட ஒரு கணிதக் கல்விதான் 
அன்று 1968 வரை தமிழக மாணவர்களுக்குக் 
கற்றுத் தரப்பட்டது.

இன்று நிலைமை மாறி விட்டது. இப்போதெல்லாம் 
ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் ப்ளஸ் டூ தேர்வு 
எழுதுகிறார்கள். இவர்களின் 5 லட்சம் பேர் 
கணிதம், அறிவியல் பாடங்களைப் படிக்கிறார்கள்.

இதனால்தான் B B ROY என்ற RESISTANCE COLOUR CODE
பற்றிய நிமோனிக்கிற்கு அத்தனை பெரும் விடை 
எழுதி விடுகிறார்கள், போலி நக்சல்பாரித் 
தற்குறிகளைத் தவிர்த்து.

இருப்பினும் தற்காலத்திய மார்க்சியக் கல்வி,
குறிப்பாக பொருள்முதல்வாதக் கல்வி மிகவும் 
தரம் குறைந்ததாக பெரும் போதாமையுடன்
இருக்கிறது. இதற்குக் காரணம் மார்க்சிய வகுப்பு 
எடுக்கும் அனைவரும் அறிவியலோ கணிதமோ
கற்காதவர்களாக இருப்பதுதான்.

மறைந்த தலைவர்கள் பி ஆர் பரமேஸ்வரன்,
வி பி சிந்தனை ஆகியோருடன் நான் நெருங்கிப் 
பழகி இருக்கிறேன். அப்போது நான் CPMல் 
இருந்தேன்.பொருள்முதல்வாதம் பற்றிய எனது 
கேள்விகளுக்கு இருவராலும் பதிலளிக்க 
இயலவில்லை.பின் உ ரா வரதராஜன் அவர்களிடம் 
இதே கேள்விகளிக் கேட்டேன். அவர் கல்லூரியில் 
படித்தவர்.எனினும் அவராலும் பதிலளிக்க 
இயலவில்லை. அவர் B.Com, CAIIB படித்தவரே தவிர 
Maths Physics படித்தவர் அல்ல.

இவர்களெல்லாம் அதாவது பி ஆர் பரமேஸ்வரன்,
வி பி சிந்தன், உ ரா வரதராசன் ஆகியோர் காலத்தில் 
நான் முந்தைய பத்திகளில் கூறிய General Maths 
எனப்படும் போதாமை நிரம்பிய கணிதக் கல்விதான் 
இருந்தது. எனவே வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களிடம் 
அறிவியல் கணிதம் சார்ந்து கேள்வி கேக்க யாரும் 
இருக்கவில்லை.

இன்று இந்த 2023ல் நிலைமை தலைகீழாக மாறி விட்டது.
ஆண்டுதோறும் 1 லட்சம் பொறியியல் இடங்கள்  
நிரம்புகின்றன. 5 லட்சம் பேர் ப்ளஸ் டூவில் அறிவியல் 
கணிதம் படிக்கிறான். சுருங்கக் கூறின் தமிழ்நாட்டின் 
8 கோடி மக்கள் தொகையில் 2 கோடிப்பேர் அறிவியல் 
கணிதம் கற்றவர்களாக இருக்கிறார்கள் குறைந்தது 
ப்ளஸ் டூ வரையிலேனும். இன்றைய இளைஞர்களில் 
60 சதவீதம் பேரேனும் அறிவியல் கணிதம் 
கற்றவர்களாக இருக்கும் உண்மையை நாம் உணர 
வேண்டும்.

ஆனால் மார்க்சியவாதிகள் என்போர் அறிவியல் 
கணிதத்தில் இருந்து தங்களைத் துண்டித்துக் 
கொண்டவர்களாக இருக்கிறார்கள்.  தங்களைப் 
போன்றே மக்களும் அறிவியல் கணிதம் 
கற்காதவர்களாகவே  இருப்பார்கள் என்று அவர்கள் 
நினைக்கிறார்கள். இது உண்மை அல்ல.

அறிவியலைக் கற்க வேண்டும் என்று நாம் சொன்னால் 
போலி நக்சல்பாரிகள் எவ்வளவு வெறியுடனும் 
மூர்க்கத்துடனும் அடிக்க வருகிறார்கள் என்பதை 
அனுதினமும் பார்த்து வருகிறேன்.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வு.
இன்று சிதறுண்ட போன SOCயில் ஒரு முழுநேர 
ஊழியன் இருந்தான். அவன் அடிக்கடி வந்து எங்களைச் 
சந்திப்பான். ஒருமுறை நாங்கள் பேசிக் கொண்டு 
இருந்தபோது,  அவன் எங்களிடம், "கால்குலஸ் ஒரு 
முதலாளித்துவப் படிப்பு தோழர்" என்றான். இதுதான் 
போலி நக்சல்பாரிகளின் தரம், தராதரம்.

அறிவியல் கல்வி இல்லையெனில் பொருள்முதல்வாதக் 
கல்வி பாழாகும். பொருள்முதல்வாத ஞானம் 
இல்லாவிடில் மார்க்சியம் பாழாகும். 
*********************************************
   
  

      
                  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக