வியாழன், 7 செப்டம்பர், 2023

கர்நாடக காங்கிரஸ் அமைச்சரின் திமிர்!
நஷ்ட ஈட்டுக்கு ஆசைப்பட்டு விவசாயிகள் 
தற்கொலை செய்து கொள்கிறார்கள் 
என்கிறார் இவர்!
---------------------------------------------------------------
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி 
நடக்கிறது. சித்த ராமையா முதல்வராக இருக்கிறார்.

இவரின் அமைச்சரவையில் சிவானந்த பட்டீல்
என்று ஒரு அமைச்சர் இருக்கிறார். கரும்பு மற்றும் 
வேளாண் பொருட்களின் சந்தைக்கான 
அமைச்சர் இவர். 

இவர் நேற்று தமது திமிரை வெளிப்படுத்தினார்.
விவசாயிகள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள் 
தெரியுமா? அரசாங்கம் கொடுக்கிற நஷ்ட ஈட்டுக்கு
ஆசைப்பட்டுத்தான் விவசாயிகள் தற்கொலை 
செய்து கொள்கிறார்கள் என்கிறார் அவர்.

நான் இந்த அமைச்சரை ஆதரிக்கிறேன்.
அவரின் திமிர் பிடித்த பேச்சை நான் 
கண்டிக்க மாட்டேன். ஏன் தெரியுமா?
1) நான் ஒரு போலி முற்போக்கு 
2) நான் காங்கிரசின் சம்பளப் பட்டியலில் இருக்கிறேன்.
--------------------------------------------------------
தகவல் ஆதாரம்:
The Times of India Chennai, 6 Sep 2023 page 20.
***********************************************   

 
 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக