செவ்வாய், 3 ஜனவரி, 2017

1) இருபதாம் நூற்றாண்டில் தமிழகத்தின் தமிழறிஞர்கள்
அனைவரும், மறைமலையடிகள் முதல் டாக்டர் மு.வ வரை
தைத்திங்களே தமிழ்நாட்டின் புத்தாண்டு என்று
கூறி, அதற்காக மலையளவு எழுதிக் குவித்து
இருக்கிறார்கள். அதுதான் ஆதாரம். அதையெல்லாம்
இங்கு மீண்டும் மீண்டும் எழுத இயலாது.
தேவையுள்ளோர் நாடிப் படித்திடுக.
**
2) தமிழ்நாட்டிலேயே வெவ்வேறு திணைகளில்
(குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை)
வெவேறு புத்தாண்டுகள் வழக்கில் இருந்தன
என்பதை எமது கட்டுரையில் ஏற்கனவே குறிப்பிட்டு
உள்ளேன். மேலும் இது தொடர்பாக எழுதப்பட்ட
முந்தைய கட்டுரைகளையும் படித்துப் பார்த்து,
ஒரு ஒட்டுமொத்தப் புரிதலைப் பெற வேண்டும்
என்றும் வேண்டுகிறோம்.
**

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக