திங்கள், 9 ஜனவரி, 2017

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப் பட்டுள்ள,
"ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ  விளங்கி"
என்ற பாடலை, திமுக நண்பர்கள் முழுவதுமாக
தங்கள் பின்னூட்டத்தில் எழுதிக் காட்டும்படி
உரிமையுடன் வேண்டுகிறேன். இந்தப் பாடல்
தெரியாதவர்கள், என் கட்டுரையை எப்படிப் புரிந்து
கொள்ள இயலும்?  


மற்றவர்களைச்  சேர்த்துக் கொள்வது போன்றதல்ல
நாஞ்சிலைச் சேர்த்துக் கொள்வது. மற்றவர்கள்
தங்கள் தங்கள் தொகுதிகளில் அரசியல் செய்வார்கள்.
ஆனால் நாஞ்சில் அப்படிப்பட்டவர் அல்லர். அவர்
வெறும் ஊழியர். ஒருகார் ஓட்டுநர் போல, ஒரு
எலக்ட்ரீசியன் போல, நாஞ்சில் வேறு ஊழியரே.
எனவே அவரைச் சேர்க்கும்போது கொள்ள வேண்டிய
அளவுகோல் முற்றிலும் வேறு.

என்னிடம் பணம் இல்லை. இருந்தால்
நியூட்டன் அறிவியல் மன்றம் சார்பாக வழக்குத்
தொடருவேன். இங்கு பணம் என்பது நீதிமன்றத் கட்டணம்,
வழக்கறிஞர் கட்டணம் மட்டுமல்ல. வளர்மதியின்
எடுபிடி லும்பன்களை எதிர்கொள்ள நானும் சில
லும்பன்களை என் பாதுகாப்பிற்கு வைத்திருக்க
வேண்டும். அவர்களின் பராமரிப்புச் செலவை
என்னால் தாங்க முடியாது.
**
அடுத்து வளர்மதியைத் தோற்கடித்த திமுக
கு க செல்வம் அவர்களின் ஆதரவை நான் பெற
வேண்டும். இது எளிது. அவர் என்னை ஆதரிப்பார்.
என்றாலும், செலவு என்னைச் சாரும்.

   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக