ஞாயிறு, 1 ஜனவரி, 2017

நெருக்கடி நிலைக்  காலத்தில் இந்திரா அம்மையார்
கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து பறித்தெடுத்து
பொதுப்பட்டியலில் சேர்த்திட்டார். பின்னர் வந்த
மொரார்ஜி தேசாய், அம்மையார் மேற்கொண்ட
பல்வேறு மாற்றங்களை நீக்கி முன்பிருந்த நிலையைக்
கொணர்ந்தார் எனினும், கல்வியை மீண்டும்
மாநிலப் பட்டியலில் சேர்க்க மறுத்தார். இதை எதிர்த்து,
இந்தியாவில் எந்த மாநிலக் கட்சியாவது போராடியதா?
இல்லை. உரிமம் பெற்ற நடுவண் அரசு தன் விருப்பம்
போல ஆடுகிறது. இதில் வியப்பென்ன?
**
உரிமை இழந்தோம் என்ற உணர்வே இன்றி மரத்துப்
போன கட்சிகளை வைத்துக் கொண்டு, நாம் யாரைக்
குறை சொல்வது?       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக