திங்கள், 13 மார்ச், 2017

கோவாவில் பாஜக ஆட்சி அமைக்கிறது!
விலைபோன காங்கிரஸ் தலைவர் திக் விஜய சிங்!
திக் விஜய் சிங்கிற்கு உரிய விலை கொடுத்த
(100 சி) மனோகர் பாரிக்கர்!
----------------------------------------------------------------------------------------
கோவாவில் ஆட்சி அமைக்க முடியாது; எனவே
காங்கிரஸ் ஆட்சி அமைக்கட்டும்; ஓராண்டுக்குள்
காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து விட்டு நாம் (பாஜக)
ஆட்சி அமைக்கலாம் என்பதே பாஜகவின் திட்டம்.

ஆனால் கோவாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்து
விடக்கூடாது என்பதில் ஒரு முக்கிய காங்கிரஸ்
தலைவர் கவனமாக இருந்தார். இதற்குக் காரணம்
இவரின் புது மனைவி (இவர் ஒரு ஊடகவியலாளர்)
என்று கூறப் படுகிறது.

யார் இந்தக் காங்கிரஸ் தலைவர்? இவர்தான்
மஹாஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ திக்விஜய் சிங். ராகுல் காந்தியால்
இவரை எல்லாம் கட்டுப் படுத்த முடியாத நிலை.

எனவே திக்விஜய் சிங் மோகன் பாரிக்கருக்கு
ரகசியத் தூது அனுப்பினார். பேரம் பேசப்பட்டது.
100 சி என்று முடிவானது. ஐஐடியில் படித்துப்
பட்டம் பெற்ற பொறியாளரான மனோகர் பாரிக்கர்
பண விஷயத்தில் மிகவும் தாராளமானவர்
என்பது அனைவரும் அறிந்ததே.

50 சி கிடைத்தால் போதும் என்ற மனநிலையில்
இருந்த திக்விஜய் சிங் 100 சி என்றதும் திக்கு
முக்காடிப் போனார் என்று கூறப்படுகிறது.

இந்தக் கள்ளத்தனமான திரைமறைவு பேரத்தை
மூடி மறைக்க, கோவாவில் ஜனநாயகப் படுகொலை
என்று 120 டெசிபெல்லில் கத்துமாறு மோகன் பாரிக்கர்
திக்விஜய் சிங்கிற்கு அறிவுரை வழங்கி உள்ளாராம்.

78 வயதில் இளமையான புது மனைவியுடன் வாழும்
எந்த ஒரு மனிதனும் இந்த முடிவைத்தான் எடுப்பான்,
திக்விஜய் சிங் இதற்கு விதிவிலக்கு அல்ல
என்கிறார் ஒரு சமூகவியல் மற்றும் உளவியல் நிபுணர்!
*************************************************************     


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக