செவ்வாய், 28 மார்ச், 2017

மெரினா பொய்கள்!
மக்கள் யாரும் கூடவில்லை!
மதியம் 2 மணிக்கு எடுத்த புகைப்படங்கள்!
சமூக அக்கறை உள்ள அன்பர்களே கவனம்!
--------------------------------------------------------------------------------
1) மெரினா கடற்கரையில் மக்கள் கூடுவதாகவும்
போலி அடித்து விரட்டுவதாகவும் சில பின்நவீனத்துவக்
கயவர்கள் திட்டமிட்டு வதந்தி பரப்பி வருகின்றனர்.
இதற்கு பலரும் இரையாகி உள்ளனர்.

2) இன்று 28.03.2017 செவ்வாய் மாலை 4.30 மணியில்
இருந்து 6.45 வரை மெரினா கடற்கரையில் இருந்தேன்.

3) எந்தக் கூட்டமும் கூடவில்லை. யாரையும் போலீஸ்
அடித்து விரட்டவும் இல்லை! இன்று வழக்கமான
ஒரு நாளே.

4) மதியம் 2 மணிக்கு கடைகள் திறக்காத நிலையில்
எடுத்த புகைப்படங்களையும், பழைய
புகைப்படங்களையும் முகநூலில் வெளியிட்டு,
மெரீனாவுக்கு வந்த மக்களை போலீசார் விரட்டி
 அடிப்பதால்,மெரினா வெறிச்சோடிக் கிடப்பதாக
சிலர் முகநூலில் திட்டமிட்டு வதந்தி பரப்புகின்றனர்.

5) இவர்களின் உள்நோக்கம் என்ன? மக்களிடம்
பொய்களைப் பரப்பி வரும் இந்தக் கயவர்களுக்கு
எங்கிருந்து பணம் வருகிறது? இந்தக் கேள்விகளுக்கு
விடை காண வேண்டும்!

6) சமூக அக்கறை உள்ளவர்களைக் குறிவைத்தே
இத்தகைய வதந்திகள் பரப்பப் படுகின்றன. எந்தச்
செய்தி வந்தாலும், அதன் உண்மைத் தன்மையை
அறியாமல், அதை மற்றவர்களுக்குப் பரப்புவது மக்களின்
அன்றாட வாழ்க்கையை, இயல்பு வாழ்க்கையைச்
சீர்குலைக்கும். இழிந்த நோக்கத்துடன் வதந்தி
பரப்பும் கயவர்களுக்கு இரையாகாமல் இருப்பதே
நல்லது.
**************************************************************     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக