ஞாயிறு, 19 மார்ச், 2017

இடதுசாரி ஒற்றுமைக்கு
கொள்ளி வைத்த மார்க்சிஸ்ட் கட்சி!
------------------------------------------------------------------
CPI,CPM, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய மூன்று
கட்சிகளும் ஒரு மிகச் சாதாரண இடைத் தேர்தலில்
ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை. இதற்கு ஒரே காரணம்
மார்க்சிஸ்ட் கட்சியின் வறட்டுப் பிடிவாதமே.

கூடவே இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியை (CPI) பகைத்துக்
கொண்டு, மற்றவர்களின் கருத்துக்கு துளி கூட
மதிப்பளிக்காமல், முட்டாள்தனமாக ஆர்கே நகரில்
மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட வேண்டிய
அவசியம் என்ன?

ஒரு கூட்டணியில் பெரும்பான்மை முடிவுக்குக்
கட்டுப்பட மறுக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு
ஜனநாயகம் பற்றிப்பேச என்ன அருகதை உள்ளது? 

தோழமைக் கட்சிகளின் கருத்தை மீறி, ஆர்கே நகரில்
போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி, தேர்தலில் வெற்றி
பெறப் போகிறதா? அல்லது டெபாசிட் பெறப் போகிறதா?

டெபாசிட் பெற குறைந்தது 30,000 வாக்குகள் பெற
வேண்டும். இதை ஒருபோதும் மார்க்சிஸ்ட் கட்சியால்
பெற  முடியாது என்பது நாடறிந்த உண்மை.

அதிகபட்சம் 2000 வாக்குகள் பெற்றால் பெரிய விஷயம்.
ஆனால் தற்போது, CPIவிசிக கட்சிகளின் ஆதரவை
இழந்த பிறகு, மார்க்சிஸ்ட் கட்சியால் ஆயிரம் வாக்கு
கூடப் பெற முடியாதே!

700 ஓட்டு அல்லது 800 ஓட்டுக்கு  மேல் மார்க்சிஸ்ட்
கட்சியால் ஆர்கே நகரில் பெற முடியாத போது,
தோழமைக் கட்சிகளை பகைத்துக் கொண்டு
இத்தேர்தலில் நிற்க வேண்டிய அவசியம் என்ன?

இதனால் யாருக்கு என்ன லாபம்? மார்க்சிஸ்ட் கட்சிக்கோ
அல்லது பொதுவான இடதுசாரி நலன்களுக்கோ
இதனால் என்ன லாபம்?

ஆக எப்படிப் பார்த்தாலும் முட்டாள்தனமான,
இடதுசாரி ஒற்றுமையைச் சீர்குலைக்கிற
இந்த முடிவை மார்க்சிஸ்ட் கட்சி எடுக்க வேண்டிய
அவசியம் என்ன? இதன் உள்மர்மம் என்ன?
அடுத்த கட்டுரையில் காண்போம்!
*********************************************************  
நான் அடுத்த கட்டுரையில்  எழுத நினைத்த
விஷயங்களை ஒரேயடியாகப் போட்டு உடைத்து
விட்டீர்கள். CPI and VCK are inclined towards DMK but CPM is in favour
of aligning with ADMK. So there was no unanimity. More secrets will be revealed;
please wait.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக