திங்கள், 13 மார்ச், 2017

கதிர் அரிவாள் சின்னத்தை பறிகொடுக்கும் CPI!
உபி தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி!
--------------------------------------------------------------------------------------
உபி தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 14 கோடி plus
என்பதை முன்பே பார்த்தோம். பதிவான வாக்குகள்
8 கோடி plus.

 CPI போட்டியிட்ட இடங்கள்=68
பெற்ற வாக்குகள்= 1,38,763
வாக்கு சதவீதம்= 0.2 சதம்
 14 கோடி மக்கள் தொகை உள்ள உபியில்,
கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற வாக்கு வெறும்
ஒரு லட்சத்து 38 ஆயிரம்தான். அதாவது 68
தொகுதிகளிலும் சேர்த்து கிடைத்த வாக்குகள்
வெறும் 1,38,763தான். 

உபியில் உள்ள கான்பூரில்தான் இந்தியக் கம்யூனிஸ்ட்
கட்சி 1925 டிசம்பர் 25 அன்று தொடங்கப்பட்டது.
கட்சியின் முதல் மாநாடு தமிழரான சிங்காரவேலர்
தலைமையில் நடந்தது. அந்த உபியில் இன்று,
கிட்டத்தட்ட 95 ஆண்டுகள் கழித்து, CPI பெற்ற வாக்கு
வெறும் ஒரு லட்சத்து 38 ஆயிரம்!!!

உபி தேர்தலில், நோட்டாவுக்கு வாக்களித்தவர்கள்
இதை விட அதிகம்.
NOTA = 7.57,643. இது 0.9 சதம்.

ஏழரை லட்சம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.
ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெறும் ஒரு லட்சத்து
38 ஆயிரம் பேர் தான். எவ்வளவு இழுக்கு!

மார்க்சிஸ்ட் கட்சியின் நிலை இதை விடக் கேவலம்.
இக்கட்சி 26 இடங்களில் போட்டியிட்டது. கிடைத்த
வாக்குகளை வெளியில் சொல்ல தேர்தல் ஆணையமே
நாணியது. (மொத்தமே 5 இலக்கத்தைத் தொடவில்லை).

இரு கட்சிகளும் தங்கள் தேர்தல் சின்னத்தை
இழக்கிறார்கள். 2019 நாடாளுமன்றத் தேர்தலில்
தா பாண்டியனோ நல்லகண்ணுவோ போட்டியிட்டால்
கதிர் அரிவாள் சின்னத்தில் போட்டியிட முடியாது.
ஏதேனும் ஒரு சுயேச்சை சின்னத்தில்தான் (உதாரணம்:
மண்பானை, தண்ணீர்க்குழாய்) போட்டியிட முடியும்.

ஆழ்ந்த அனுதாபங்கள்!!
***************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக