சனி, 16 ஜூன், 2018


பேரறிவாளன் தண்டனை விவரங்கள்!
27 ஆண்டு சிறைவாசம் முடிந்து 
28ஆம் ஆண்டு சிறைவாசம் தொடங்கியது!
------------------------------------------------------------------------------ 
ராஜீவ் கொலை நடந்த பின்னால், 21 நாள் கழித்து 
ஜூன் 11, 1991 அன்று பேரறிவாளன் பிடிபடுகிறார்.
தடா நீதிமன்றம் 1997 ஜனவரியில் பேரறிவாளன் உட்பட 
குற்றவாளிகள் அனைவர்க்கும் தீர்ப்பு வழங்கியது.

அவரின் சிறைவாசம் என்பது 1991 ஜூன் 11 முதல் 
தொடங்குகிறது. 

தடா நீதிமன்றத் தீர்ப்பு வந்த நாளான 1997 ஜனவரி 
அன்று கணக்குப் போட்டுப் பார்த்தால், அவர் மீதான 
தீர்ப்பின்படி,
1) 3 மாதக் கடுங்காவல் 2) ஓராண்டுக் கடுங்காவல் 
3) 2 ஆண்டுக் கடுங்காவல் 4) மூன்றாண்டுக் கடுங்காவல் 
ஆகிய தண்டனைகளை அனுபவித்து முடித்து விட்டார்.
அன்றைய தினத்தில் எஞ்சி இருக்கும் தண்டனைகளை 
( இரண்டு ஆயுள் தண்டனை, ஒரு மரண தண்டனை)
மட்டுமே அவர் அனுபவிக்க வேண்டி இருந்தது.

உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில், இரண்டு ஆயுள் 
தண்டனைகள் ரத்து செய்யப்பட்டன. மரண தண்டனை 
மட்டுமே மிச்சம் இருந்தது. அதுவும் பின்னர், நீதியரசர் 
சதாசிவம் அவர்களின் தீர்ப்பால் ரத்து செய்யப்பட்டு,
ஆயுள் தண்டனையாக மாற்றப் பட்டது.

தற்போது இந்த ஒரு தண்டனை மட்டுமே 
(ஆயுள் தண்டனை) எஞ்சி இருக்கிறது. அதை அவர் 
அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.கடந்த ஜூன் 11, 2018
தேதியுடன் பேரறிவாளன் 27 ஆண்டுகள் சிறையில் 
கழித்து .விட்டார். 28ஆம் ஆண்டு சிறைவாசத்தை 
தொடங்கி இருக்கிறார்.
(கட்டுரைத் தொடரில் இருந்து ஒரு பகுதி)!
**********************************************************

ரூ 6500 சம்பளம் என்பது 1990ஆம் ஆண்டில் மிகப் 
பெரிய விஷயம். பேரறிவாளனை விசாரித்த சி.பி.ஐ 
அதிகாரி ரகோத்தமனுக்கே அவ்வளவு சம்பளம் 

கிடையாது. மத்திய அரசின் தொலைதொடர்புத் 
துறையில் ஒரு கோட்டப் பொறியாளருக்குக் கூட
மாதம் ரூ 5000 அலுவலக செலவு செய்ய 
அதிகாரம் கிடையாது.
**
இக்கட்டுரை ஆசிரியர் 1990 இல் மத்திய அரசில் 
பணியாற்றியபோது, இவரின் சம்பள விகிதம் 
(Pay Scale) ரூ 1400 மட்டுமே. அதாவது பேரறிவாளனின் 
சம்பளத்தை விடக் குறைவு
-----------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக