புதன், 20 ஜூன், 2018

கார்த்திகேயனும் ரகோத்தமனும் போலீஸ்
அதிகாரிகள். போலீசை நியாயப் படுத்தியும்,
போலீசின் தவறுகளை மறைத்துமே அவர்களால்
புத்தகம் எழுத முடியும். மேலும் கார்த்திகேயன்
ரகோத்தமன் இருவரும் அரசாங்கத்தில் சம்பளம்
வாங்கும் அதிகாரிகள். எனவே அரசுக்கு எதிராக
அவர்களால் எழுத முடியாது. மத்திய அரசில்
பணியாற்றிய எனக்கு அரசு நடைமுறைகள்
பற்றி நன்கு தெரியும்.

அடுத்து, கார்த்திகேயன் புலன் விசாரணை
நடத்திய காலத்தில்,  பிரதமராக இருந்தவர்
நரசிம்ம ராவ். அவரும் சந்திரா சாமியும் மிக
மிக நெருக்கம். இது கார்த்திகேயனுக்கும்
ரகோத்தமனுக்கும் தெரியும். எனவே சந்திரா
சாமி பற்றிய உண்மையை அவர்களால்
ஒருபோதும் கூற இயலாது.

அடுத்து புலிகள் சந்திரா சாமி சந்திப்புகள்
ரகசியமானவை. சந்திரா சாமி நடத்திய
ஆயுத வியாபாரம் ஆயுதத் தரகு இரண்டுமே
சட்ட  விரோதமானவை. அதை புகைப்படம்
எடுத்து பத்திரிகையில் வெளியிடுவதில்லை.

குமரன் பத்மநாபன்தான் புலிகள் சார்பில்
சந்திரா சாமியுடன் தொடர்பு கொண்டவர்.
அடுத்து  லண்டனில் இருந்த கிட்டு. கிட்டு
இப்போது உயிருடன் இல்லை. ஆக குமரன்
பத்மநாபன் பற்றிய  செய்திகளைப் படித்தால்
சந்திரா சாமி பற்றித் தெரிய வரும்.      
.   

பிறழ் புரிதல் என்பது இதுதான். சந்திரா சாமியை
கலைஞரை எதிர்த்தால், அவரை ஏன் விடுதலைப்
புலிகள் கொல்ல வேண்டும்? கலைஞர் என்ன
புலிகளிடம் சம்பளம் வாங்குபவரா? தன்னிடம்
சம்பளம் வாங்கும் ஆட்களைத்தான், அவர்கள்
தவறு செய்தால் புலிகள் அமைப்பு தண்டிக்கும்.
கலைஞர் புலிகளின் வேலைக்காரன் அல்ல.
எனவே புலிகள் கலைஞரை எதுவும் செய்வதற்கு  
எந்த முகாந்திரமும் இல்லை..

ஆனால், கலைஞருக்கு எங்கிருந்து ஆபத்து வரும்?
சந்திரா சாமி சாதாரண ஆள் அல்ல. அவர் பெரும்
ஏகாதிபத்தியங்களின் பிரதிநிதி. ராஜிவ் காந்தியையே
படுகொலை செய்த சந்திரா சாமிக்கு கலைஞர்
எல்லாம் வெறும் தூசிதான். இதுதான் உண்மை.  


ராஜிவ் படுகொலை குறித்து இதுவரை சுமார்
10 கட்டுரைகள் எழுதி இருப்பதாக நினைக்கிறேன்.
எவரும் இதுவரை சொல்லாத, சொல்லத் துணியாத
விஷயங்களை நான் சொல்லி இருக்கிறேன்.
எழுதிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மை.
ஒரு பக்கச் சார்பு இல்லாமல் உண்மையின்
பக்கம் நின்று இத்தொடரை எழுதுகிறேன்.
தொடரின் சில கட்டுரைகள் 2016ல் எழுதியவை.

இதை படிக்கும் இளைஞர்களுக்கு ஒரு சொல்.
நீங்கள் புத்தகத்தில் படித்தோ அல்லது கூகிளில்
படித்தோ தெரிந்து கொள்வதை நான் என்னுடைய
நேரடி அனுபவம் மூலமாக .அறிந்தவன். எழுதப்
பட்ட பல விஷயங்களுக்கு நான் நேரடிப்
பங்கேற்பாளன் அல்லது நேரடி சாட்சி.

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக