திங்கள், 18 ஜூன், 2018

கவசாகி மோட்டார் சைக்கிள்
மாதச் சம்பளக்காரனால் வாங்க முடியுமா?
----------------------------------------------------------------------------
ஆயிரம் முறை சொல்லி இருக்கிறேன். இந்தக்
கட்டுரைத் தொடரில் சொல்லப்படுகிற விவரங்கள்
அனைத்தும் பின்வரும் ஆதாரங்களின்
அடிப்படையில் அமைந்துள்ளன என்று.
1. நீதியரசர் வாத்வா உள்ளிட்ட மூன்று நீதியரசர்கள்
வழங்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு
2. பேரறிவாளன், நளினி ஆகியோரின் வழக்கறிஞர்கள்
உச்சநீதிமன்றத்தில் முன்வைத்த வாதத் தொகுப்பு.
3. A1 மற்றும் A 18 இருவரும் நீதிமன்ற விசாரணையில்
அளித்த சாட்சியம்.

ராஜிவ் கொலை நடந்து முடிந்த இந்த 27 ஆண்டுகளில்
எவர் ஒருவரும் சொல்லாத, சொல்லத் துணியாத
விஷயங்களை நியூட்டன் அறிவியல் மட்டுமே
சொல்கிறது; சொல்லி வருகிறது. சொல்லப்பட்ட
விஷயங்களுக்கு அதிர்ச்சி மதிப்பு (SHOCK VALUE)
உண்டு. எனவே குட்டி முதலாளித்துவம் அதிர்ச்சியில்
உறைந்து போய்க் கிடக்கிறது. 

இதோ இன்னுமொரு சாம்பிள்.
ஆதாரம்: நீதியரசர் வாத்வா அவர்களின்
தீர்ப்புரையில் இருந்து:.
"Arivu (A-18) visited Jaffna and other places in Srilanka along
with Irumborai (A-19) clandestinely in June 1990, purchased a Kawasaki
motor cycle on 04.05.1991 at Madras to facilitate quick movement 
for himself and one or the other co-conspirators.........."

1990-91ல் பேரறிவாளனுக்கு வயது 19. அவருக்கு
வருமானம் எதுவும் கிடையாது. கவஸாகி மோட்டார்
சைக்கிள் என்பது அன்று மிகப்பெரிய விஷயம்.
பேரறிவாளனின் தந்தை சாதாரண பள்ளி ஆசிரியர்.
அவரின் சமயத்தில் மோட்டார் சைக்கிள் வாங்கித்
தர முடியாது.

படித்து, பட்டம் பெற்று, போட்டித் தேர்வு எழுதி,
அதில் தேறி, வேலை கிடைத்து, 9 மாதம் பயிற்சி
முடித்து, அதன் பிறகு, மத்திய அரசில் வேலைக்குச்
சேர்ந்த என்னைப் போன்றவர்களின் சம்பளமே
அன்று ரூ 1400தான்.

அலுவலகத்தில் ஸ்கூட்டர் லோன் அல்லது பைக் லோன் போட்டுத்தான் ஸ்கூட்டர் வாங்க முடியும். அதுவும்
சீனியர்கள் விண்ணப்பித்து இருந்தால்
அவர்களுக்குத்தான் முதலில் கிடைக்கும்.
ஜூனியர்கள் அடுத்த வருஷம் வரை காத்திருக்க
வேண்டியதுதான். இதுதான் அன்று மத்திய
மாநில அரசு ஊழியர்களின் நிலை.

ஆனால் 19 வயதே ஆன, வேலை இல்லாத
பேரறிவாளன் எப்படி கவாசாகி மோட்டார்
சைக்கிளை தன சொந்தப் பயன்பாட்டுக்கு
வாங்க முடியும்? அது எப்படி சாத்தியம் ஆனது?

1991ல் என்னிடம் ஸ்கூட்டர் இல்லை. பிள்ளைகளை
பள்ளி கொண்டு செல்ல, வீட்டுக்கு கூட்டி வர
ஸ்கூட்டர் தேவை. வாங்க முடியவில்லை.

நான் உழைத்துச் சம்பாதிக்கிறவன்.
உழைக்கிறவனுக்குத் தான் காசின் அருமை
தெரியும். எனவே வீண் பேச்சைத் தவிர்க்கவும்.
 
திருநெல்வேலிக்காரனான எனக்கு மத்திய அரசில்
வேலை கிடைத்ததும் பயிற்சிக்காக சென்னையில்
போட்டார்கள். அப்போது ஸ்டைபெண்டுதான்
(stipend) தருவார்கள். அந்தத் தொகையில் லாட்ஜ் ரூம்
வாடகை, 3 வேளைச் சாப்பாடு, போக்குவரத்து
இதற்கெல்லாம் அரசாங்கம் கொடுத்த 
ஸ்டைபெண்ட் பத்தாது. செட்டிநாடு மெஸ்சிலும்,
அய்யர் மெஸ்சிலும் அக்கவுன்ட், பெட்டிக்
கடையில் அக்கவுன்ட், நாயர் டீக்கடையில்
அக்கவுன்ட் என்று அக்கவுன்ட் வைத்துத்தான்
வாழ முடியும். ஊரில் இருந்து ஐயா அனுப்பும்
மணி ஆர்டரை எதிர்பார்த்துத் தான் வாழ்க்கை.
இதுதான் உழைத்துச் சாப்பிடுகிறவன் நிலைமை.
இதை எவராவது மறுக்க முடியுமா?  


1990-91 காலக்கட்டத்தில் இந்திய அரசியலில்
பாஜகவுக்கு செல்வாக்கு எதுவும் கிடையாது.
எனவே பாஜகவை அன்றைக்கு சீந்துவார்
யாரும் இல்லை.

வாழப்பாடி ராமமூர்த்தியிடம்
ராஜிவ் ஒரு வேலையை ஏவி இருந்தார்.
தேர்தல் செலவுக்காக ராஜிவ் கொண்டு வந்திருந்த
பணத்தை எடுத்து பாதுகாப்பாக வைக்கும்படி
ராஜிவ் வாழப்பாடிக்கு கட்டளை இட்டு இருந்தார்.
அந்தப் பணத்தை எடுத்து பாதுகாப்பாக வைத்து
விட்டு  வாழப்பாடி கூட்ட மேடைக்கு வரும்போது,
ராஜிவ் கொலை செய்யப்பட்டு விட்டார். இதுதான்
நடந்தது.

ராஜிவ் கொலையானவுடனே, மொத்தப்
பணத்தையும் தானே அபகரித்துக் கொண்டார்
வாழப்பாடி. மற்றப்படி, சதியில் அவருக்குப்
பங்கு இருந்ததாகச் சொல்வதற்கு ஆதாரம் இல்லை.
அடுத்து, வாழப்பாடி போன்றவர்கள் பொறுக்கித்
தின்பவர்கள். பொதுவாக பொறுக்கித்
தின்பவர்களை சதியில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.   
  
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக