ஞாயிறு, 11 ஜூன், 2017

கணக்கின் விடை:
--------------------------------
எந்த ஒரு வெறியும் இல்லாத சட்ட மன்ற
உறுப்பினர்களின் எண்ணிக்கை= 0
அதாவது பூஜ்யம்.
எனவே சாதி, மத, இன வெறி இவற்றில் எந்தவொரு
வெறியும் இல்லாத சட்ட மன்ற உறுப்பினர்களின்
பட்டியலில் எவரும் இல்லை.
இது ஒரு கணக்கு; கணக்கு மட்டுமே.
It is a sum and a sum is always a sum and nothing else.


1) இந்தக் கணக்கு நடைமுறை வாழ்வில் இருந்து
எடுக்கப்பட்டது (real time situation). மெய்யான வாழ்வில்
எந்த வெறியும் இல்லாத ஒரு சட்ட மன்ற உறுப்பினரைக்
காண்பது அரிது. எனவே விடை பூஜ்யம் என்பது
100 விழுக்காடு சரி; தர்க்கப் பொருத்தம் உடையது.
2) அடுத்து, இது போன்ற கணக்கு 10ஆம் வகுப்பு பாடத்தில்
உள்ளதுதான். ஒரு கணக்கைக் கொடுப்பதும்
அதைச் செய்து விடையைக் காண்பதும் மட்டுமே
நோக்கமாகக் கொண்டு நான் கணக்குகளைக்
கொடுப்பதில்லை என்பது அறிந்ததே. நாம் யாரும்
10ஆம் வகுப்புச் சிறுவர்கள் அல்ல.
3) இந்தக் கணக்கிற்கான சூத்திரம் புத்தகத்தில்
உள்ளது. அதுவும் நம் அனைவருக்கும் நினைவு
இருக்கும்.
4) Please point out the logical inconsistency wherever it is found.  

மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டு, சிலேட்டில்
எழுதி, அதை புகைப்படமும் எடுத்து இங்கு
வெளியிட்ட மாரிமுத்து வீரமுத்து அவர்களுக்கு
நன்றி. சூத்திரம் மற்றும் வென் படத்துடன் கூடிய
விளக்கம் அருமை. பிரகாஷ் பொற்செழியனுக்கும் 
உமாமஹேஸ்வரிக்கும்  நன்றி, ஜான், வேல்முருகன்
ஆகிய இருவருக்கும் மிக்க நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக