புதன், 21 ஜூன், 2017

அவர்கள் இந்த மண்ணின் பூர்வ குடிகள்.
ஆப்பிரிக்காவில் இருந்தோ அல்லது வேறு
எங்கிருந்தோ வந்தவர்கள் அல்ல. இந்தியாவில்
பூர்வ குடிகளே இல்லை என்றுதான் கட்டுரையாளர்
டோனி ஜோசப் எழுதி இருக்கிறார். அதை மறுத்தே
எமது கட்டுரைகள் எழுதப் படுகின்றன.

இன்று உலகில் வாழும் 750 கோடி மக்களின்
DNAவை ஆய்வு செய்தால் 99.99 சதம் ஒன்றாகத்
தான் இருக்கும். ஏனெனில் ஒற்றுமைகளே அதிகம்;
வேற்றுமைகள் குறைவு. எனவே பேரளவிலான
சாம்பிள்களே ஓரளவு நெருக்கமான  தோராயத்தைத்
தரும்.
**
ஒரு பரிசோதனை முயற்சி ( a trial) என்ற
அளவில்தான், மிக்க குறைவான அளவு
சாம்பிளைக் கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்
பட்டன. இந்த ஆய்வு  முடிவுகள் எவ்வித
திட்டவட்ட நிரூபணத்தையும் (conclusive proof)
தர இயலாது. மேலும் உறுதி செய்யும் பிற
சான்றுகள் (corroborative evidence) தேவை. மானுட
மரபியல் குறித்து இதுவரை, இந்த நிமிடம் வரை
சொல்லப்பட்ட அனைத்தும் தோராயங்களே!
அனுமானங்களே!  எல்லாமே hypothesis தான்.
accepted truth அல்ல.

ஆரியர் வருகை குறித்த
இதுவரை நான் எழுதிய
3 கட்டுரைகளை
படிக்காவிட்டால் ஏற்படும்
அறிவு இழப்புக்கு
நான் பொறுப்பல்ல! 
     



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக