வியாழன், 1 ஜூன், 2017

எவ்வளவு உயர்ந்த பதவி? எவ்வளவு மூடத்தனமான
பேச்சு? ?நியாயமா? இதனால் லாபம் யாருக்கு?

உங்கள் விமர்சனத்தை ஏற்கிறேன்.

நகுதல் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு.
நன்றி. தங்களுக்கு

அடையாள அரசியல் போராட்டங்கள் பல
என்ஜிஓக்களால் முன்னெடுக்கப் படுகின்றன.
இந்த உண்மையையும் நாம் உரக்கச்
சொல்லியாக வேண்டும்.

அண்ணாச்சி, நான்தான் ஒரிஜினல் அக்மார்க் தமிழன்.
நான் திருநெல்வேலிக்காரன். தாமிரபரணி மற்றும்
பொதிகை மலை அடிவாரத்து ஊரில் பிறந்து வளர்ந்தவன்.
என்னுடைய மூதாதையர்கள்தான் முதன் முதலில்
தமிழ் பேசியவர்கள். தமிழை  உருவாக்கியதே எங்களின்
மூதாதையர்கள்தான் என்பதை உங்களுக்கு நினைவு
படுத்துகிறேன். இதை கவனம் கொள்ளுங்கள் அண்ணாச்சி. 


அண்ணாச்சி. எனது பதிவைப் பற்றி நீங்கள் என்ன
 வேண்டுமானாலும் சொல்லலாம். அதற்கு உங்களுக்கு
முழு உரிமை உண்டு. என் பதிவுக்கு நான்
 பொறுப்பேற்கிறேன். ஆனால் என் மீதான தனிநபர்
தாக்குதலில் இறங்க வேண்டாம். தனி நபர் வசவுகள்
வேண்டாம். தியாகி நெல்லை ஜெபமணி மீதான
மரியாதையின்  காரணமாக, உங்களுடன் சரிக்குச்
சரியாக  மல்லுக்கட்ட .விரும்பவில்லை.


அண்ணாச்சி மோகன்ராஜ் அவர்களுக்கு,
தியாகி நெல்லை ஜெபமணி அவர்களின் மீது
நான் மிகுந்த மரியாதை உடையவன். பத்துப்
பைசா அரசியலில் சம்பாதிக்காதவர் அவர்.
ஆனால் தாங்களோ  தந்தையார் பெயரைக்
கெடுத்த போலீஸ் அதிகாரி. மாமூல் வாங்கியவர் நீங்கள்.
**
வேறொரு பதிவில்  கேவலமான பிறவி என்ற தகாத
வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கிறீர்கள். இது
அடுக்காது. அந்தக் கேவலமான பிறவி நீங்கள்தான்
என்று நான் கூறுகிறேன். நிற்க.
**
இந்திராவைப்  பிரதமர் ஆக்கிய காமராசரை
என்னால் சபிக்க முடியாது. அப்படி காமராசரை
சபிக்க முடியாதவர்கள் எல்லாம்  கேவலமான
பிறவிகள் என்றால்,அப்படியே இருந்து விட்டுப்
போகட்டும். அண்ணாச்சி, யாகாவா ராயினும்
நாகாக்க. இதற்கு மேல் சொல்லும்படி என்னை
வைத்து விடாதீர்கள். தவறான வார்த்தையை நீக்குங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக