ஞாயிறு, 18 ஜூன், 2017

பாவேந்தரை எவரும் சந்தடி சாக்கில்
இணைக்கவில்லை. பாவேந்தர் புதுச்சேரியில்
வாழ்ந்தவர். அங்கு பிரிட்டிஷ் ஆட்சி கிடையாது.
பிரெஞ்சு ஆட்சிதான். பிரிட்டிஷாரை எதிர்த்த
அநேகப் புரட்சியாளர்கள் பலருக்குப் புகலிடமாக
விளங்கியது புதுச்சேரி. புதுச்சேரியில் உள்ள
பிரிட்டிஷ் எதிர்ப்புப் புரட்சியாளர்களின்
வலைப்பின்னலில் பாவேந்தரும் ஒரு கண்ணியாக
இருந்தவர். இது வரலாறு.
**
மேலும் வாஞ்சிநாதனுடன் சென்ற இன்னொரு
போராளியான மாடசாமிப்பிள்ளை  தப்பித்து
வந்தபோது அவரைக் கடல் வழிப்பயணமாக
பாதுகாப்புடன் அனுப்பி வைத்தவரும் பாவேந்தரே.
இது வரலாறு.
**
வரலாற்றைப் படிக்காமல், காழ்ப்புணர்ச்சியுடன் 
இருந்தால், இதை புரிந்து கொள்வது கடினம்.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக