வெள்ளி, 2 ஜூன், 2017

புதிய டைனமைட் கட்டுரை!
ஒரே நாளில் தெருவுக்கு வரும் உபி முஸ்லிம்கள்!
மாட்டுக்கறிச் சட்டத்தின் பண்பாட்டு விளைவுகள்! 

ஒரே நாளில் தெருவுக்கு வரும்
உபி முஸ்லிம்கள்!
புதிய டைனமைட் கட்டுரை
படித்தீர்களா?

சற்றுமுன் வெளியான எமது புதிய டைனமைட்
கட்டுரையை நீங்கள் படிக்கவில்லை என்றால்.
உங்களுக்கு ஏற்படும் அறிவு இழப்புக்கு
நாங்கள் பொறுப்பல்ல.

வெளியாகி  விட்டது. எனது டைம்லைனில்
படியுங்கள்.


மாட்டுக்கறி  உண்ணும் நிகழ்வுகளை நடத்துவது
போராட்டம் ஆகாது. அது பிரச்சினையை திசை
திருப்பும். அடையாள அரசியலில் மக்களைத்
தள்ளும். பொருளாதார அம்சங்களை மூடி
மறைத்து, இந்து-முஸ்லீம் பிரச்சினையாக இந்த
விவகாரத்தை மாற்றி விடும். மக்களிடம்
உண்மையை எடுத்துச் சொல்ல வேண்டும்.
இது உழைப்பாளி மக்களின் வாழ்வாதாரம்
பறி போகிற பிரச்சினை. இதை இந்து-முஸ்லீம்
பிரச்சினையாக சித்தரித்தால்   ,இறுதியில் பாஜகவே ஆதாயம்
அடையும்.
 

தோழர் அன்பன் அவர்களுக்கு,
கோபாலகிருஷ்ண நாயுடுவின் அழித்தொழிப்பை
(படுகொலை) நடத்தியது மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்
கட்சியின் ஆயுதப் பயிற்சி பெற்ற படைக்குழு.
திட்டமிட்டபடி அழித்தொழிப்பை நடத்திய பிறகு,
படைக்குழுவினரும் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்
கட்சியினரும் அந்த ஏரியாவை விட்டே வெளியேறி
தலைமறைவாகி விட்டனர். கட்சியினர், அனுதாபிகள்
என்று ஒருவர் கூட அந்த ஏரியாவில் இல்லை. எனவே
போலீசார் யாரையாவது கைது செய்து கணக்குக்
காட்ட வேண்டும் என்று ஊரிலேயே  இருந்த ஒரு சிலரைக்
கைது செய்தனர். அப்படிக் கைது செய்யப் பட்டவர்களில்
சிலர் தி.க. கட்சியினர். இதுதான் நடந்தது.
**
மற்றப்படி, தி.க கட்சியினருக்கு அழித்தொழிப்பு
என்பதெல்லாம் அஜெண்டாவிலேயே கிடையாது.
பெரியார் அமைதி வழிப் போராட்டங்களைத்
தவிர வேறு எதையும் ஆதரிக்காதவர். எனவே
இன்று பல ஆண்டுகள் கழித்து, நடந்தது என்ன
நடந்தது என்பது பலருக்கும் மறந்து போன நிலையில்,
தி.க.வினர் இந்த அழித்தொழிப்புக்கு உரிமை
கோருவது நியாயமற்றது. நாணத்தக்கதும் கூட.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக