செவ்வாய், 13 ஜூன், 2017

இது இரும்பைப் பிழியும் இடம்: எலுமிச்சம்
பழம் பிழியும் இடம் அல்ல. பெரியார் தம் மீது
எந்தச் சாயமும் பூசாமல், நான் இப்படித்தான்
என்று பட்டவர்த்தனமாக, தனக்கு என்ன
தோன்றியதோ அதை மறைக்காமல் பேசியவர்.
அவர் மீது யாரும் எச்சாயமும் பூச முடியாது. நிற்க.
**
விஷயம் எதுவாயினும் அதை அறிவியல்
வழியில் அணுகும் இடம் இது. இங்கு முன்வைக்கப்பட்ட
கருத்துக்களை எந்த சோதிடராலும் மறுக்க இயலாது.
**
பாரதியாரின் ஆத்திச்சூடி படித்தவர்கள் அவர்
சோதிடம் குறித்து என்ன சொல்லி இருக்கிறார்
என்பதை  அறிவார்கள். "சோதிடந்தனை இகழ்"
என்கிறார் பாரதியார். அதன்படி சோதிடம்
இங்கு அறிவியல் முறையில் இகழப் படுகிறது.
**
தென்னாலி ராமன் சோதிடத்தை எப்படிப்
பொய்ப்பித்தார் என்பது தென்னாலி ராமன்
கதைகளில் படித்து அறியலாம்.
**
ராஜாஜி சோதிடர்கள் குறித்து எவ்வளவு
கடுமையாக கூறினார் என்பதற்கு ஆதாரம்
இருக்கிறது. அதையும் வெளியிடுவேன்.
**
தேவாரத்தில், கோளறு பதிகம் என்ன கூறுகிறது
என்பதையும் படித்தறியலாம்.நிற்க.
**
வடிவியலில் (Geometry) Reductio ad absurdum என்று ஒரு
முறை உண்டு. இது ஒருவகைத் தர்க்கம் (logic).
சில தேற்றங்களை நிரூபிப்பதில் இம்முறை
பயன்படுகிறது. இதே முறையைத் தான்
(Reductio ad absurdum) என்னுடைய இந்தக்
கட்டுரையிலும் பயன்படுத்தி உள்ளேன்.
இதற்கும், நீங்கள் உங்களின் கமென்டில்
குறிப்பிட்டவருக்கும் என்ன சம்பந்தம்?
   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக