வெள்ளி, 10 ஏப்ரல், 2015

ஜெயகாந்தன் யார்?
------------------------------
ஜெயகாந்தன் ஒரு CDP! அதாவது, COMPLEX DRIVEN PERSONALITY!
சணச் சித்தம் சணப் பித்தம் என்று வாழ்ந்தவர். தன்னை SANSCRITISE
செய்துகொண்டவர். அதாவது, தன்னை மேல்சாதிப் பார்ப்பானாகக்
கருதும் மன அமைப்பை ஏற்படுத்திக் கொண்டவர். ஒரு கம்யூனிஸ்ட்
என்பவன் தன்னை வர்க்க நீக்கம் (DECLASSIFY) செய்து கொள்ள
வேண்டும். அதற்கு மாறாக, இவர் தன்னை SANSCRITISE செய்து
கொண்டவர். SUPERIORITY COMPLEX என்ற உளவியல் சிக்கலால்
அவதிப் பட்டு வந்த இவர், யாரையும் எடுத்தெறிந்து பேசுவதும்,
இளக்காரமாகக் கருதுவதுமான கேடுகளைக் கொண்டு
இருந்தவர். சுருங்கக் கூறின், மனிதப் பண்பே இல்லாதவர்.
1970களில் அவரது தொடர்பு/நட்பு வட்டங்களில் இருந்து
அவருடன் நெருங்கிப் பழகியவன் என்ற முறையில், நான்
அவரின் கல்யாண குணங்களை நன்கு அறிவேன்.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக