சனி, 2 மே, 2015

போர்க்களத்துக்கு அஞ்சிப் புறமுதுகிட்டு ஓடிப் 
புலம் பெயர்ந்த கோழைகளைக் கண்டித்து 
கவிஞர் புதுவை இரத்தினதுரை கவிதை!
------------------------------------------------------------------------
உக்கிரமான போர் ஈழத்தில் நடந்து கொண்டு இருந்த போது, 
பணக்காரத் தமிழர்கள் பலர், புலம் பெயர்ந்து இந்தியா, கனடா,
பிரான்சு என்று பல்வேறு நாடுகளுக்கு ஓடினர். விடுதலைப் 
புலிகளின் ஆஸ்தானக் கவிஞர் என்று அறியப் படும்
புதுவை இரத்தினதுரை இந்தக் கோழைகளின் முகத்தில் 
காரி உமிழ்ந்து இருக்கிறார்.
**
அதில் ஒரு கவிதை!
**
பெற்ற தாயினை எட்டி உதைப்பது போல் 
தாயகம் தீயில் எரிகையில், விட்டு 
விமானத்தில் ஏறிப் பறந்தவர் 
வீரம் இல்லாதவர் நாயினும் கீழானவர் 
சுற்றி வளைத்தனர் சிங்களப் படையினர் 
சுட்டுத் தள்ளுவர் என்ற பயத்தினால் 
விட்டுப் பறந்த கோழைகள் நாளையே 
வீடு திரும்பினால் காரியே துப்புவோம்.        
**
இப்படி நீள்கிறது கவிதை.
ஏழை எளிய ஈழத் தமிழர்கள் அகதி முகாம் என்னும் 
சிறையிலும், பணக்காரத் தமிழர்கள் பொது வெளியில் 
சர்வ சுதந்திரமாக, சகல வசதிகளையும் நுகர்ந்து கொண்டும்,
இப்படியாக ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு அமைந்து 
விட்டது. இப்படி சொந்த நாட்டுக்குத் துரோகம் செய்து விட்டு 
வந்த நாட்டில் புரட்சி பேசிக் கொண்டு திரிவதையும் 
காண்கிறோம்.
************************************************************   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக