செவ்வாய், 19 மே, 2015

இதில் திருத்தல்வாதத்துக்கு இடமே இல்லை.
பருண்மையான நிலைமைகளுக்கு ஏற்ப, பருண்மையாக 
மார்க்சியத்தைப் பிரயோகிப்பது திருத்தல்வாதம் என்றால்,
உங்களின் கண்ணோட்டப்படி, லெனின்தான் மிகப் பெரிய 
திருத்தல்வாதி.மார்க்சியம் சுடுகாட்டில் பிரயோகிக்கப் படும் 
தத்துவம் அல்ல. ரத்தமும் சதையும் உயிரும் உணர்வும் 
உடைய மனித சமூகத்தில் பிரயோகிப்பது.
**
இந்தியாவில் மார்க்சியத்தைப் பிரயோகிப்பது என்றால்,
இந்திய மண்ணுக்கு ஏற்பத்தான் பிரயோகிக்க முடியும்.
இங்கு மண்ணுக்கு உரிய முக்கியத்துவத்தை எவராலும் 
புறக்கணிக்க முடியாது. அப்படிப் புறக்கணிப்பதன் பெயர்,
ஏகாதிபத்தியம். விழுந்து விழுந்து நீங்கள் மார்க்சியம் 
படித்தது ஏகாதிபத்தியத்துக்குச் சேவை செய்யவா?
Marxism is not for the sake of marxism; it is for the sake of people. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக