சனி, 2 மே, 2015

காரல் மார்க்சும் சில சிந்தனைக் குள்ளர்களும்!
-----------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
--------------------------------------------------------------------------------
மானுட வரலாற்றில் பல்வேறு தத்துவங்கள் வந்துள்ளன.
அவற்றுள், மார்க்சியம் மட்டுமே ஒட்டு மொத்தமான 
மானுட விடுதலைக்குமான ஒரே தத்துவம். மார்க்சியத்துக்குப் 
பின் வந்த தத்துவமான பின்நவீனத்துவத்தால் மார்க்சியத்தை
வெல்ல முடியவில்லை. எனவே இன்றும் மார்க்சியம் 
மட்டுமே வெல்லற்கரிய தத்துவமாக விளங்குகிறது.
**
மகோன்னதத்தின் சிகரத்தில் மார்க்சை மானுட வரலாறு 
அமர்த்தி இருக்கிறது. புகழின் உயரம் இன்பினிட்டி (INFINITY)
என்றால், அந்த INFINITY யில் மார்க்ஸ் இருக்கிறார். இதற்கு 
மேலும் எவராலும் அவருக்குப் புகழ் சேர்க்க முடியாது.
**
அதேபோல், அவதூறுகள் அண்ட முடியாத உயரத்தில் 
மார்க்ஸ் இருக்கிறார். எனவே மார்க்சை எவரும் அவதூறு 
செய்து விட முடியாது.
**
ஆனால் இது புரியாத சில சிந்தனைக் குள்ளர்கள், தங்களின் 
குட்டி முதலாளித்துவ விடலைத் தனத்தை வெளிப்படுத்தி 
வருகிறார்கள். மார்க்சை மிகவும் பலவீனமானவராகக் 
கருதும் இவர்கள், தங்களைத் தாங்களே மார்க்சின் 
SECURITY GUARDS  ஆக வரித்துக் கொள்கிறார்கள். யாரேனும் 
சிலர் மார்க்சியத்தை விவாதித்துக் கொண்டிருந்தால்,
இவர்கள் "அய்யோ, மார்க்சை அவதூறு செய்கிறார்களே"
என்று அலற ஆரம்பித்து விடுகிறார்கள்.
**
மார்க்சியம் விவாதிக்கப் படுகிறது என்றால், அது   
உயிரோட்டத்துடன் இருக்கிறது என்று பொருள். 
அரைக்க அரைக்க சந்தனம் கமழ்வதைப் போல,
விவாதிக்க விவாதிக்கத் தான் மார்க்சியம் நன்கு 
புரிந்து கொள்ளப் படும்; நன்கு பரவும்.
**
இதைப் புரிந்து கொள்ளாத, புரிந்து கொள்ள இயலாத 
சிந்தனைக் குள்ளர்கள், விவாதங்களைத் திசை 
திருப்புகிறார்கள். காத்திரமான விவாதங்களை 
மேற்கொள்வதற்குத் தடையாக இருக்கிறார்கள்.
**
எனினும், இவர்கள் மீது நமக்கு சினமோ வருத்தமோ இல்லை.
மார்க்சியம் என்பது நடைமுறை சார்ந்த ஒரு தத்துவம்.
மார்க்சிய நூல்களை நெட்டுருச் செய்து கொண்டிருக்கும் 
இவர்கள், ஏதேனும் ஒரு நடைமுறையில் இறங்கினால்,
அவர்களால் மார்க்சியத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
ஏதேனும் தொழிற்சங்க இயக்கத்திலோ விவசாயிகள் 
சங்கத்திலோ வேலை செய்வார்கள் என்றால், 
அவர்களாலும் மார்க்சியத்தைப் புரிந்து கொள்ள 
முடியும்.
**
லெனின் எழுதிய புகழ் பெற்ற நூல் "என்ன செய்ய வேண்டும்?"
என்ற நூல். இது தொழிற்சங்கத்தில் வேலை செய்வோருக்கான 
கையேடு. SSLC  கூடத் தேறாத எங்களின் லைன்மேன்களும்,
டெலிபோன் மெக்கானிக்குகளும், இந்த நூலைப் புரிந்து 
கொள்ள முடிந்ததை எங்கள் அனுபவத்தில் நாங்கள் 
கண்டு இருக்கிறோம். காரணம் அவர்கள் நடைமுறையில் 
இருந்ததுதான். 
**
WITHOUT PRACTICE, NOBODY CAN LEARN MARXISM!
மார்க்சியம் படிப்பது எதற்காக? பிரயோகிப்பதற்காக.
அதாவது, பயின்ற மார்க்சியத்தை ப்ராக்டிஸ் பண்ணாமல் 
இருந்தால், மார்க்சியம் மண்டையில் இறங்காது.
*************************************************************

பார்வை: மார்க்சியத்தில் சாதியத்துக்குத் தீர்வு உள்ளதா 
என்ற எங்களின் தொடர்கட்டுரை மீதான குட்டி 
முதலாளித்துவக் கருத்துக்கள்.
-----------------------------------------------------------------------------------------------

      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக