ஞாயிறு, 14 ஜூன், 2015

நீரறவு அறியா நிலமுதற் கலந்த 
கருங்குரல் நொச்சிக் கண்ணார் குரூஉத்தழை 
மெல்இழை மகளிர் ஐதகல் அல்குல் 
தொடலை ஆகவும் கண்டனம் இனியே 
வெருவரு குருதியொடு மயங்கி உருவுகரந்து
ஒருவாய்ப் பட்ட தெரியல் ஊன்செத்துப் 
பருந்துகொண்டு உகப்பயாம் கண்டனம் 
மறம்புகல் மைந்தன் மலைந்த மாறே.   
**
(புறம்-271, காமக் கண்ணியார் பாடியது,
நொச்சித் திணை, செருவிடை வீழ்தல் துறை.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக