ஞாயிறு, 14 ஜூன், 2015

மேதகு பிரபாகரன் அவர்கள் தேசியத் தலைவர் 
என்று ஏன் அழைக்கப் படுகிறார்?
---------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
----------------------------------------------------------------------------
மேதகு பிரபாகரன் அவர்கள் தேசியத் தலைவர் என்பதன் பொருள் 
அவர் தமிழ் ஈழ தேசியத் தலைவர் என்பதாகும். (நன்கு கவனிக்கவும்:
தமிழ் ஈழ தேசியத் தலைவர்). தமிழ்நாட்டின் தேசியத் தலைவர் 
என்ற பொருளில் அமைந்தது அன்று இச்சொல்லாட்சி.
**
இலங்கையில் சிங்களர் ஓர் தேசிய இனம் என்னும்போது,
தமிழரும் சம உரிமை படைத்த தேசிய இனமே என்று 
உரத்துச் சொல்லும் பொருட்டு, மேதகு பிரபாகரன் 
அவர்கள் தமிழ் ஈழ தேசியத் தலைவர் என்று அழைக்கப் 
பட்டார். 
**
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு,
மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் கிழக்கிலும் 
ஈழத் தமிழர்கள் வாழந்தனர். எனவே இந்த மண்ணின் 
உரிமையுள்ள குடிகள் தமிழர்கள்: அவர்கள் ஒரு 
தேசிய இனத்தவர் என்பதை உலகிற்கும் சிங்கள அரசுக்கும் 
யாப்புறுத்தும் பொருட்டு, மேதகு பிரபாகரன் அவர்கள் 
தேசியத் தலைவர் என அழைக்கப் பட்டார்.
**
எனவே மேதகு பிரபாகரன் அவர்களை தேசியத் தலைவர் 
அல்லர் என்று மறுப்பது, ஈழத் தமிழ் மண்ணில் 
தமிழர்க்கான உரிமையைக் கைவிடுவதற்குச் சமம் ஆகும்.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக