வெள்ளி, 24 ஜூன், 2016

பிறழ் புரிதல் தவிர்ப்போம்!
------------------------------------------------
1) இன்றைய உலகின் மக்கள் தொகை 740 கோடி.
தமிழ்நாட்டில் மட்டும் எட்டுக்கோடி. இந்த
எட்டுக்கோடிப் பேரில் தனி ஒருவர் நாத்திகரா
இல்லையா என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை.
எனவே பெரியார் நாத்திகரா அல்லரா என்ற
பொருள் குறித்து எமது பதிவு பேசவில்லை.

2) திராவிட இயக்கம் முன்னெடுத்த கடவுள் மறுப்பு
இயக்கம் அறிவியல்பூர்வமானதா இல்லையா
என்பதுதான் இக்கட்டுரையின் பேசுபொருள்.

3) அறிவியல்பூர்வமான கடவுள் மறுப்பை
திராவிட இயக்கம் முன்னெடுக்கவில்லை
என்கிறார் வைரமுத்து. நாங்களும் அதையே
சொல்கிறோம்.

4) தனி ஒரு மனிதன் தன் அனுபவம் மூலமாகவோ,
தன் common sense  மூலமாகவோ நாத்திகன் ஆகலாம்.
அது இங்கு பேசுபொருள் இல்லை.

5) மக்கள் திரள் மத்தியில் ஒரு இயக்கமாக
முன்னெடுக்கும்போது, அந்த இயக்கம்
அறிவியல்பூர்வமாக இருந்ததா இல்லையா
என்பதுதான் இங்கு கேள்வி. 

6) Is it SCIENTIFIC or NOT?  இது மட்டும்தான் பேசுபொருள்.

7) இதை ஒரு தனிக்  கட்டுரையாக வெளியிடுகிறோம்.
எல்லோரும் போடுகிற பின்னூட்டங்களை கவனிக்க
முடியவில்லை. பார்வையில் தப்பி விடுகின்றன.      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக