திங்கள், 27 ஜூன், 2016

அர்னவ் (Arnav) என்ற சொல்லுக்கு கடல் என்று பொருள்.
கடலன், சமுத்திரன், கடலை ஆள்பவன் என்றெல்லாம் பொருள்.  

ஐயங்கார்கள் தமிழ்ப் பற்றின் காரணமாகவே
தமிழ் பெயர்களைச் சூடியுள்ளனர். அவர்கள்
வைணவர்கள். திராவிட வேதத்தை
( நாலாயிரம் திவ்வியப் பிரபந்தம்)
ஏற்றுக் கொண்டவர்கள்.
**
தமிழ் முன்செல, திருமால் பின்வர
என்பதுதான் வைணவர்களின் நடைமுறை.
தமிழ்தான் முதலில் செல்ல வேண்டும்.
திருமால் பின்னால்தான் வர வேண்டும்.
ராமானுஜர் குறித்து நான் எழுதிய கட்டுரைத்
தொடர்களை நினைவு கூரவும்.

உங்களுக்கு உள்ள கருத்து சுதந்திரம் எனக்குக் 
கிடையாது, சட்டென்று மனதில் பட்ட ஒரு கருத்தை
நீங்கள் சொல்வதுபோல், நான் சொல்ல இயலாத
நிலை உள்ளது. அடுத்து காலரிக்கு (gallery) வாசிக்க
வேண்டிய தேவை எனக்கு உள்ளது.
**
சமஸ்கிருதம் வேறு; சமஸ்கிருதத் திணிப்பு வேறு
என்ற உண்மை தமிழ்நாட்டில் உள்ள, சமஸ்கிருதத்தை
வைத்துப் பிழைப்பு நடத்துபவர்களிடம் எடுபடாது.


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக