சனி, 18 ஜூன், 2016

மறைமலை அடிகளை எதிர்த்து
ஒரு நாயும் குரைக்கவில்லையே ஏன்?
-----------------------------------------------------------------------
இருபதாம் நூற்ராண்டின் முதல் பாதியில், அதாவது
1901-1950 காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் சமஸ்கிருத
ஆதிக்கம் உச்சத்தில் இருந்தது. மருத்துவம் படிக்க
வேண்டும் என்றால் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும்
என்ற நிபந்தனை அன்று இருந்தது.

பள்ளிகளில் தமிழாசிரியர்களாய் இருப்பவர்கள்
சமஸ்கிருதமும் படித்திருந்தால் மட்டுமே
வேலை கிடைக்கும் என்ற நிலை அன்று இருந்தது.

இதையெல்லாம் எதிர்த்துப் போராடி, சமஸ்கிருதத்தை
சிம்மாசனத்தில் இருந்து கீழே இழுத்துப் போட்டு
மிதித்த ஒருவர் இருந்தார். அவர் யார்?

தமிழ்நாட்டின் தலை சிறந்த சமஸ்கிருத அறிஞராகவும்,
அதே நேரத்தில் அதிதீவிர சமஸ்கிருத எதிர்ப்பாளராகவும்
அவர் இருந்தார். அவர் யார்?

காளிதாசனின் சமஸ்கிருத நாடகத்தைத் தமிழில்
மொழி பெயர்த்தவர் அவர். அவரின் படைப்பு
தமிழ் மாணவர்களுக்குப் பாடமாக இருந்தது. அவர் யார்?

அவரின் கருத்துக்களை எதிர்த்து, சமஸ்கிருதத்திற்கு
ஆதரவாகக் கருத்துக் கூறும் எவர் ஒருவரும், அவரின்
காலில் விழுந்து வணங்கிய பின்னரே கருத்துக்
கூற முடியும் என்ற நிலை அன்று இருந்தது.
அவர் யார்?

சமஸ்கிருதம் படித்தால் மாரடைப்பு வரும், ஆஸ்துமா
வரும் என்று கட்டுரை எழுதினார் அவர். அவரை எதிர்த்து
எந்த நாயும் குரைக்கவில்லை. அவரை எதிர்த்து வெல்ல
எவருக்கும் துணிவில்லை. அவர் யார்?

சமஸ்கிருதத்தை அகற்றி, அதன் இடத்தில் தமிழை
வைத்தவர் அவர். அவர் யார்?

அவரைப் பற்றி அறியாத எவரும் நாகரிக மனிதராகக்
கருதப்பட இயலாதவர்கள். அப்படிப்பட்ட அவர் யார்?

சமஸ்கிருத அபிமானிகளும் சரி, எதிர்ப்பாளர்களும்
சரி, பதில் சொல்லக் கடமைப் பட்டவர்கள்.
***************************************************************** 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக