வெள்ளி, 24 ஜூன், 2016

பொருள்முதல்வாதம் அல்லாத நாத்திகம் எதுவாயினும்
அது போலி நாத்திகமே. பொருள்முதல்வாதம் மட்டுமே
அறிவியலின் அடிப்படையில் சமூகத்திற்கு
கடவுளை பற்றிய விளக்கம் அளிக்கிறது. கடவுளை
மனிதன்தான் படைத்தான் என்றும் கடவுள்
என்பது வெற்றுக் கற்பனை என்றும் அறிவியல்
வழி நின்று நிரூபித்து ஆத்திகத்தை வெட்டி
வீழ்த்தியது பொருள்முதல்வாதம். அது மட்டுமே
மெய்யான நாத்திகம்.
**
பெரியார் கூறிய கடவுள் மறுப்பானது அறிவியலின்
அடிப்படையில் உருவாகவில்லை. பிராமண
ஆதிக்கத்தை எதிர்க்க, கடவுளை மறுப்பது
உதவியாக இருக்கும் என்ற நோக்கில் பெரியார்
நாத்திகம் பேசினார்.
**
எனவே அந்த நாத்திகத்தால் ஆத்திகத்தை வெட்டி
வீழ்த்த முடியவில்லை. மலையாகக் குவிந்து
கிடைக்கும் பெரியாரின் எழுத்துக்களில்
பொருள்முதல்வாதம் பற்றி ஒரு சிறு குறிப்பு
கூட கிடையாது. ஏனெனில் பெரியார்
பொருள்முதல்வாதம் பற்றி அறியாதவர்.
**
இதைத்தான் வைரமுத்து கூறுகிறார். அவரின்
கட்டுரையைப் படியுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக